Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிப்-22ம் தேதி பூமிக்கு மிக அருகில் பறக்கவுள்ள அபாயகரமான சிறுகோள்.

பூமியைக் கடந்த விண்கற்கள் பற்றி பல அறிக்கைகள் கடந்த 2020-ம் ஆண்டில் வெளியாகியுள்ளன. மேலும் சிறுகோள்கள் என்று அழைக்கக்கூடிய பல விண்வெளி பாறைகள் இந்த ஆண்டிலும் நமது கிரகத்திற்கு மிக நெருக்கமாக பறக்க இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, 2020 XU6 என்ற ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்த கோள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 22-ம் தேதி அன்று நடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக Daily Express-ல் வெளியான அறிக்கையின்படி, இந்த சிறுகோள் 213 மீட்டர் நீளம் கொண்டதாகும். இது நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி சிலையை (93 மீட்டர்) விட இரண்டு மடங்கு பெரியது. இது தற்போது சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு மணி நேரத்திற்கு 30,240 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதாவது வெறும் ஒரு மணி நேரத்தில் பூமியைச் சுற்றி வரும் அளவுக்கு இதன் வேகம் இருக்கிறது.

நாசா, இந்த 2020 XU6 என்ற சிறுகோளை ‘Near Earth Object’ என்று வர்ணித்துள்ளது. மேலும் இதை அபாயகரமானவை என்றும் அழைத்துள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த சிறுகோள் பறக்கும் போது நமது பூமியைத் தாக்கும் என்று அச்சப்படத் தேவையில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நாசா தனது ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (JPL) இணையதளத்தில், “பூமிக்கு மிக அருகில் பறக்கும் பொருட்கள் என்றால் அது வால்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் தான். அவை அருகிலுள்ள கிரகங்களின் ஈர்ப்பால் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைய முற்படுகின்றன.

வால்மீன்கள் மற்றும் விண்கற்கள் மீதான விஞ்ஞான ஆர்வத்திற்கு பெரும்பாலும் அவற்றின் நிலையே காரணமாக அமைகின்றன. ஏனெனில் இவை சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தை உருவாக்கும் செயல்முறையிலிருந்து வெளியான மீதமுள்ள துண்டுகள் என்பதால் அதன் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளது. கோடிக்கணக்கான வால்மீன்களின் தொகுப்பிலிருந்து உருவான மாபெரும் கிரகங்கள் தான் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை. இவற்றின் உருவாக்க செயல்முறையிலிருந்து வெளியான மீதமுள்ள துண்டுகள் தான் இன்று நாம் காணும் வால்மீன்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

சிறுகோள்கள்:

ஒரு சிறுகோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் ஆகும். தற்போது சூரியனைச் சுற்றிவரும் மில்லியன்கணக்கான சிறுகோள்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான பகுதியில் காணப்படுகின்றன. அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இருப்பதில்லை. ஏனெனில் அவை சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. ஆனால் சிலவற்றில் களிமண் அல்லது உலோகம், நிக்கல் மற்றும் இரும்பு போன்றவை உள்ளன. அவை பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

Leave a Comment