இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி உரை : வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும்

இது புதிய இந்தியா, இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேட் அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடிஇ ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பெண்களை போர் விமானிகளாக்க வாய்ப்பு வழங்கி உள்ளோம் என்றும் பெண் வீரர்களுக்கும் ஆண் வீரர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராணுவ வீரர்களுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் நாடு இந்தியா என்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை முறியடிக்க எந்த சக்தி வந்தாலும் அதை நாம் முறியடிப்போம் என்று கூறினார்.தேசிய போர் நினைவகம்: சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் 25இ942 வீரர்களின் பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ராணுவத்தின் 4 விதமான முக்கியத்துவங்களை குறிக்கும் வகையில் மைய மண்டபம் 4 சக்கரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு சக்கரத்தின் மீது 15.5 மீட்டர் உயரத்தில் அணையா விளக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட்டை தொடர்ந்து தலைநகரில் இரண்டாவது அணையா விளக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய போர் நினைவகத்தைச் சுற்றி பல்வேறு போர் திறன்களை குறிக்கும் வகையில் 600 கிலோ முதல் 1000 கிலோ வரை எடை கொண்ட 6 வெண்கல சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் நினைவு சின்னங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக ரக்ஷா சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று புறம் சூழப்பட்ட இதில் 600-க்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. சுவர் போல் நின்று நாட்டை காக்கும் வீரர்களை குறிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ நிகழ்ச்சிகள் அனைத்தும் இனி இந்த நினைவுச் சின்னத்திலேயே நடத்தப்படும் என்றும் மறைந்த வீரர்களுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் வீரர்களுடன் கலந்துரையாடும் வகையிலும் விரைவில் வசதி செய்யப்பட உள்ளது. தேசிய போர் நினைவுச் சின்னத்தில் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் அதே சமயம் மையப்பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தினமும் மாலையில் முகாம் திரும்புதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment