இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொருளாதார மறுமலர்ச்சி , கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

அண்டை உறவுகளை வலுப்படுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான அரசியல் பணியக உறுப்பினரும், இராஜதந்திரியுமான யங் ஜீச்சி, சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரின் தலைவர் வங் சியாடாஓ மற்றும் சீன வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ச்செங் சொங்டோ ஆகியோரை உள்ளடக்கிய சீனத் தூதுக்குழுவினரின் இலங்கைக்கான விஜயத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (9/10) வெளிநாட்டு அமைச்சு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் முன்னிலையில் கடந்த அக்டோபர் 9 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இந்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுகையில், இலங்கையில் 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியிலான சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களின் ஆக்கபூர்வமான வகிபாகம் மற்றும் குறித்த திட்டங்களினால் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் குறித்து தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். பாரியளவிலான இந்த அந்நிய நேரடி முதலீடுகளின் முழுமையான திறனிலிருந்து நாட்டில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களை முன்கூட்டியே நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை தூதுக்குழுவினரும், அரசாங்கமும் குறிப்பாக சுட்டிக் காட்டின.

கோவிட் தொற்றுநோய் நிலைமையின் போது சீன அரசாங்கம் அளித்த மகத்தான ஆதரவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, சீன அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற மதிப்புமிக்க உதவி மற்றும் ஆதரவுகளுக்காக தூதுக்குழுவிரிடம் தனது நன்றிகளைத் தெரிவித்தார். வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காகவும், மனித உரிமைகள் பேரவையில் விசாரணை நேரங்களின் போதான சீனாவின் உறுதியான ஆதரவிற்காகவும் தலைவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

இரு வழி வர்த்தகத்தை மீளாய்வு செய்கையில், வர்த்தக வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், சீனாவுக்கு ஆதரவான வர்த்தக சமநிலையை மேம்படுத்துவதற்காகவும், சீன உள்நாட்டு சந்தையில் கேள்வி நிலவக்கூடிய இலங்கையின் சில தனித்துவமான பொருட்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்குமாறு சீனத் தலைவர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. வர்த்தக அளவை அதிகரிப்பதற்காக சீனாவிற்கான ஏற்றுமதி நிலைமை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த ஸ்தம்பிதமடைந்துள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது சீனத் தலைவர்களால் கொழும்புக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த முதலாவது விஜயமானது, சுகாதார அமைச்சின் காற்றுக் குமிழி (Air-Bubble) எண்ணக்கருவின் அடிப்படையிலான கண்டிப்பான சுகாதார நெறிமுறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 09 அக்டோபர் 2020

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment