உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மன்னிப்பு கேட்க கால எல்லை இல்லை 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட – பிரிட்டன் பிரதமர்

லண்டன்: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஜாலியன் வாலாபாக் சம்பவம்:
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், அன்றைய காலகட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் இரு தேசிய தலைவர்கள் சத்ய பால் மற்றும் சைபுதின் கிட்ச்லு கைது செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாலியன் வாலாபாக் 6 முதல் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பூங்காவாக இருந்தது. சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்ட இதற்கு 5 குறுகிய நுழைவாயில்கள் மட்டுமே இருந்தது.

அன்றைய தினம் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரி டயர் கூட்டங்களுக்கு தடை விதித்திருந்தார். தடையை மீறி ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் உதவியுடன் அங்கு சென்ற டயர் வாயில் கதவுகளை அனைத்தையும் மூடி விட்டு மக்களை சுட்டுத் தள்ள உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஈவு இரக்கமில்லாமல் மக்களை சுட்டுத் தள்ளினர். இச்சம்பவத்தில், அப்பாவி பொதுமக்கள் 376 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,100 பேர் காயம் அடைந்தனர். சுதந்திரபோராட்ட வரலாற்றில் மாறாத வடுவாக இச்சம்பவம் அமைந்தது. இச்சம்பவத்தின் நூற்றாண்டு விழா, ஏப்., 13ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

இந்தியா கோரிக்கை:
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இச்சம்பவத்திற்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்:
இந்திலையில், 1919 ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்கு 100 ஆண்டுகள் கழித்து லண்டனின் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் பேசிய பிரதம் தெரசா மே மன்னிப்பு கோரி தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். ஜாலியன் வாலாபாக் சம்பவம் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய ஆறாத சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment