இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொருளாதார மறுமலர்ச்சி , கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

அண்டை உறவுகளை வலுப்படுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான அரசியல் பணியக உறுப்பினரும், இராஜதந்திரியுமான யங் ஜீச்சி, சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரின் தலைவர் வங் சியாடாஓ மற்றும் சீன வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ச்செங் சொங்டோ ஆகியோரை உள்ளடக்கிய சீனத் தூதுக்குழுவினரின் இலங்கைக்கான விஜயத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (9/10) வெளிநாட்டு அமைச்சு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் முன்னிலையில் கடந்த அக்டோபர் 9 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இந்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுகையில், இலங்கையில் 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியிலான சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களின் ஆக்கபூர்வமான வகிபாகம் மற்றும் குறித்த திட்டங்களினால் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் குறித்து தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். பாரியளவிலான இந்த அந்நிய நேரடி முதலீடுகளின் முழுமையான திறனிலிருந்து நாட்டில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களை முன்கூட்டியே நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை தூதுக்குழுவினரும், அரசாங்கமும் குறிப்பாக சுட்டிக் காட்டின.

கோவிட் தொற்றுநோய் நிலைமையின் போது சீன அரசாங்கம் அளித்த மகத்தான ஆதரவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, சீன அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற மதிப்புமிக்க உதவி மற்றும் ஆதரவுகளுக்காக தூதுக்குழுவிரிடம் தனது நன்றிகளைத் தெரிவித்தார். வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காகவும், மனித உரிமைகள் பேரவையில் விசாரணை நேரங்களின் போதான சீனாவின் உறுதியான ஆதரவிற்காகவும் தலைவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

இரு வழி வர்த்தகத்தை மீளாய்வு செய்கையில், வர்த்தக வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், சீனாவுக்கு ஆதரவான வர்த்தக சமநிலையை மேம்படுத்துவதற்காகவும், சீன உள்நாட்டு சந்தையில் கேள்வி நிலவக்கூடிய இலங்கையின் சில தனித்துவமான பொருட்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்குமாறு சீனத் தலைவர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. வர்த்தக அளவை அதிகரிப்பதற்காக சீனாவிற்கான ஏற்றுமதி நிலைமை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த ஸ்தம்பிதமடைந்துள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது சீனத் தலைவர்களால் கொழும்புக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த முதலாவது விஜயமானது, சுகாதார அமைச்சின் காற்றுக் குமிழி (Air-Bubble) எண்ணக்கருவின் அடிப்படையிலான கண்டிப்பான சுகாதார நெறிமுறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 09 அக்டோபர் 2020

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment