இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் நாடு திரும்பியவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

கொவிட் – 19 காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக ஒரு  தொகுதி பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல்1124 விமானம் மூலம் சுமார் 283 பயணிகள் நேற்று (31.12.2020) கட்டுநாயக்கா விமான நிலையத்;தை வந்தடைந்த நிலையிலேயே அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தேவைகளின் நிமித்தம் குறுகிய கால பயண ஏற்பாடுகளுடன் இந்தியாவிற்கு சென்ற சுமார் 1500 இற்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் கொவிட் – 19 பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருந்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை நாடிய நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்ன மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இலங்ககைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் மற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதன் பலனாக இன்றைய தினம் முதலாவது தொகுதி பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தேவையான சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவிதமான நோய் தொற்றுக்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அழைத்து வரப்பட்டுள்ள குறித்த பயணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பயணிகள் அனைவரும் பியகம, கல்பந்த மந்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் நாட்டிற்கு திரும்புவதற்காக காத்திருக்கும் ஏனையவர்களையும் விரைவில் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய குறித்த பயண ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சரின் விசேட பிரதிநிதி திருமதி. சோபிதா ராஜசூரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment