Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிப்-22ம் தேதி பூமிக்கு மிக அருகில் பறக்கவுள்ள அபாயகரமான சிறுகோள்.

பூமியைக் கடந்த விண்கற்கள் பற்றி பல அறிக்கைகள் கடந்த 2020-ம் ஆண்டில் வெளியாகியுள்ளன. மேலும் சிறுகோள்கள் என்று அழைக்கக்கூடிய பல விண்வெளி பாறைகள் இந்த ஆண்டிலும் நமது கிரகத்திற்கு மிக நெருக்கமாக பறக்க இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, 2020 XU6 என்ற ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்த கோள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 22-ம் தேதி அன்று நடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக Daily Express-ல் வெளியான அறிக்கையின்படி, இந்த சிறுகோள் 213 மீட்டர் நீளம் கொண்டதாகும். இது நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி சிலையை (93 மீட்டர்) விட இரண்டு மடங்கு பெரியது. இது தற்போது சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு மணி நேரத்திற்கு 30,240 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதாவது வெறும் ஒரு மணி நேரத்தில் பூமியைச் சுற்றி வரும் அளவுக்கு இதன் வேகம் இருக்கிறது.

நாசா, இந்த 2020 XU6 என்ற சிறுகோளை ‘Near Earth Object’ என்று வர்ணித்துள்ளது. மேலும் இதை அபாயகரமானவை என்றும் அழைத்துள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த சிறுகோள் பறக்கும் போது நமது பூமியைத் தாக்கும் என்று அச்சப்படத் தேவையில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நாசா தனது ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (JPL) இணையதளத்தில், “பூமிக்கு மிக அருகில் பறக்கும் பொருட்கள் என்றால் அது வால்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் தான். அவை அருகிலுள்ள கிரகங்களின் ஈர்ப்பால் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைய முற்படுகின்றன.

வால்மீன்கள் மற்றும் விண்கற்கள் மீதான விஞ்ஞான ஆர்வத்திற்கு பெரும்பாலும் அவற்றின் நிலையே காரணமாக அமைகின்றன. ஏனெனில் இவை சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தை உருவாக்கும் செயல்முறையிலிருந்து வெளியான மீதமுள்ள துண்டுகள் என்பதால் அதன் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளது. கோடிக்கணக்கான வால்மீன்களின் தொகுப்பிலிருந்து உருவான மாபெரும் கிரகங்கள் தான் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை. இவற்றின் உருவாக்க செயல்முறையிலிருந்து வெளியான மீதமுள்ள துண்டுகள் தான் இன்று நாம் காணும் வால்மீன்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

சிறுகோள்கள்:

ஒரு சிறுகோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் ஆகும். தற்போது சூரியனைச் சுற்றிவரும் மில்லியன்கணக்கான சிறுகோள்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான பகுதியில் காணப்படுகின்றன. அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இருப்பதில்லை. ஏனெனில் அவை சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. ஆனால் சிலவற்றில் களிமண் அல்லது உலோகம், நிக்கல் மற்றும் இரும்பு போன்றவை உள்ளன. அவை பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment