Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜெர்சி தீவுக்கு விரையும் பிரான்ஸ் போர்க்கப்பல்கள். அதிகரிக்கும் பதட்டம்.

ஜெர்சி தீவில் மீன்பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு இடையில் உள்ள சேனல் தீவுகளில் ஜெர்சி தீவு மிகப்பெரியது. அங்கு பிரித்தானியா ஆதரவுடன் சுய ஆட்சி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தீவில் மீன்பிடிக்க வரும் பிரான்ஸ் மீனவர்களுக்கு ஜெர்சி அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனங்கள் தெரிவித்தது, அதுமட்டுமின்றி மின்சாரத்தை துண்டிப்போம் என என எச்சரிக்கையும் விடுத்தது.

இதனிடையே, ஜெர்சி தீவின் முதலமைச்சருடன் உரையாடிய பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அவர்களுக்கு உறுதியான ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பதட்டங்களை உடனடியாக குறைக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஜெர்சி தீவின் முதல்வர் Senator John Le Fondre-வும் வலியுறுத்தினர் எனவும், மீன்பிடி உரிமம் தொடர்பில் ஜெர்சி மற்றும் பிரான்சுக்கு இடையில் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என பிரித்தானியா பிரதமர் அலுவகத்தின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிரெக்ஸிட் பிந்தைய மீன்பிடி உரிமைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 60 பிரான்ஸ் மீன்பிடி படகுகள் இன்று காலை ஜெர்சி தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துரைமுகம் அருகே கூடியுள்ளது.

பிரான்ஸ் மீனவர்களின் போராட்டத்தால் கடல் போக்குவரத்து தடைப்படும் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைமையை கண்காணிக்க ஜெர்சி தீவு அரசாங்கத்தின அனுமதியுடன் பிரித்தானியா இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு இரண்டு போர்க்கப்பல்களை ஜெர்சி தீவுக்கு அனுப்பியுள்ளது.  பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்சும்   போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment