Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தில்

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்கும் யோசனை நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், எதிராக 15 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

40 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டனர். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தச் செய்யாமை மற்றும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி, சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான அணிகளை அடக்குதல், இந்த சட்டத்தை பயன்படுத்தி, சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், தொழில்சார் நிபுணர்கள், எழுத்தாளர்களை பொலிஸில் தடுத்து வைப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான கடந்த காலங்களில் சர்வதேசத்தில் தொடர்ந்தும் பேசப்பட்டு வந்தது.

ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மீண்டும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்திருந்தது.

மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும் போர் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்துவதாகவும் அன்றைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.

வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டதன் பிரதிபலனாக இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் யூரோக்களாக அதிகரித்தது.

எனினும் தற்பொது ஏற்பட்டுள்ள நிலைமையில், ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைக்காமல் போனால், இலங்கையின் ஆடை உற்பத்தி தொழில் உட்பட பல தொழிற்துறைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment