அதிகரித்துள்ளது… அதிகரித்துள்ளது… தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் கடன் தொகை 2006ம் ஆண்டு 57 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் கடன் படுவேகமாக அதிகரித்து தற்போது 4 லட்சம் கோடியை நெருங்கி விட்டது இன்றைய பட்ஜெட் மூலம் தெரிய வந்திருக்கிறது.
நடப்பாண்டு தமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. 31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சியை நிறைவு செய்த போது தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக இருந்தது.
அதன் பின் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது.
2011ம் ஆண்டு மே மாதம் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2011ம் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2014ம் ஆண்டில் ரூ.1,71,490 கோடியாக அதிகரித்தது. அதன்பின் 2015-ல் கடன் ரூ.1,95,290 கோடியாகவும், 2015-16 ல் கடன் ரூ.2,11,483 கோடி.
2017-18ஆம் நிதி ஆண்டு மொத்த கடன் 3,14,366 கோடியாக உயர்ந்தது. கடந்த. 2018-19ஆம் ஆண்டு ரூ. 3,55,845 கோடியாக இருந்தது. தற்போது தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் வட்டி கட்ட தமிழக அரசு கடன் வாங்கி வருகிறது.
2011-12-ம் நிதி ஆண்டு ரூ.9,233.40 கோடி வட்டி செலுத்திய தமிழக அரசு, 2016-17-ல் ரூ.19,999.45 கோடி ரூபாய் வட்டியும், இப்போது ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டியும் அரசு கட்டி வருகிறது.