இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அதிசய ஆயுர்வேத கோவிட் மருந்து? குவியும் ஆந்திர மக்கள்.. முதல்வர் ஜெகன் விசாரணைக்கு உத்தரவு

ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐசிஎம்ஆர் குழுவிற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா என்பவரது குடும்பம் கொரோனாவிற்கு இலவசமாக ஆயுர்வேத மருந்து கடந்த சில வாரங்களாக கொடுத்து வருகிறது, இந்த மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை அந்த பகுத உள்ளூர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பலர் உடனே நல்ல பலன் கிடைப்பதாக சொல்ல, மெல்ல மெல்ல அவரது புகழ் பரவ தொடங்கியது. குறுகிய நாட்களிலேயே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் நெல்லூருக்கு படை எடுத்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்திற்கு இலவச மருந்தினை வாங்க குவிந்தனர். கிட்டத்தட்ட ஒரே நாளில் 50 ஆயிரம் பேரை குவியத்தொடங்கினர்.

நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று செல்கிறார்கள். பலர் சமூக இடைவெளியை மறந்து எப்படியாவது அந்த இலவச மருந்தை வாங்கிவிட வேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள். அந்த மருந்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் குழுவினரும் நேரில் சென்று விசாரித்தனர்

முக்கியமான அவர் கண்ணிற்கு சொட்டு மருந்து கொடுத்த உடன் ஆக்சிஜன் லெவல் உடனடியாக அதிகரிப்பதாக மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இநத் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை மருந்து குறித்து எவரும் புகார் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் கொடுக்கும் மருந்துகளை மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆய்வத்திற்கு அனுப்பி உள்ளனர். ஆய்கத்தின் முடிவு வந்த உடன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அரசின் அனுமதி பெறாமல் மருந்து விநியோகிக்க கூடாது என்று ஆய்வுக் குழு ஆனந்தையா குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர் எனினும் மருந்து விநியோகம் நடந்த வருகிறது. மிகப்பெரிய கூட்டம் கூடிவருவதால் 3வது அலை பரவும் அபாயமும் எழுந்துள்ளது. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆயுர்வேத மருந்து குறித்து ஐசிஎம்ஆர் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment