கனடா செய்திகள் புதிய செய்திகள்

அமைச்சர் பதவி விலகினார்…. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு நெருக்கடி

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் வகையில், அவரது அமைச்சரவையில் இருந்து மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ட்ரூடோ அரசாங்கம் தாமதம் காட்டுவதாக தெரிவித்து லிபரல் கட்சியின் பெண் அமைச்சர் ஜேன் பில்போட் விலகியுள்ளார்.

ட்ரூடோ அரசாங்கம் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளில் தனக்கு திருப்தியில்லை என பதவி விலகிய முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அண்மைகால செயற்பாடுகள் அரசியல் அமைப்புக்கு முரணாக காணப்படுவதாகவும், தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை காணப்படுவதாகவும் ஜேன் பில்போட் கூறியுள்ளார்.

குறிப்பாக புதிய சட்டமா அதிபர் விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையான வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனவும், அதனால் தான் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து காணப்படுவதாகவும் அவர் தனது இராஜனாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக அரசாங்கம் சட்டமா அதிபர் விவகாரத்தை கையாண்டமை திருப்தியடைய கூடியவகையில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜேன் பில்போட்டின் இராஜினாமா தனக்கு கவலை அளித்தாலும், கனேடியர்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது என பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார். அத்துடன், பில்போட்டின் சேவைக்கு பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பில்போட்டின் பதவி விலகல், ட்ரூடோவின் ஆட்சியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமரின் அமைச்சரவையில் இருந்து விலகும் இரண்டாவது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment