Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இளவரசர் ஹரி! பிரபலங்கள் நிறைந்த அமெரிக்க அரங்கில் செய்த செயல்!

அமெரிக்காவில் பிரபலங்கள் நிறைந்த ஒரு பிரம்மாணட நிகழ்ச்சியில் இரவரசர் ஹரி செய்த செயல் அங்கிருந்த ஒட்டுமொத்த பார்வையார்களையும் எழுந்து நின்று பாராட்டவைத்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை Vax Live concert எனும் மிகப் பெரிய இசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காகவும், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை அதிக அளவில் பெற உதவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் பணத்தையும் திரட்டுவதற்காகவும் இந்த Vax Live concert நடத்தப்படுகிறது.

பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியை பிரபல பாடகி Selena Gomez தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் Jennifer Lopez, Pearl Jam’s Eddie Vedder, Foo Fighters, J Balvin and HER உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் இசைக் குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரித்தானிய இளவரசர் ஹரி, கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி மேகன் மார்க்கலை வீட்டில் விட்டு தனியாக கலத்து கொண்டார். அதே சமயம், தனது தாத்தா இளவரசர் பிலிப் இறந்த பிறகு ஹரி பங்கேற்கும் மிகப் பெரிய பொது நிகழ்வு இதுவாகும்.

இந்த விழாவில் ஒரு சிறப்பு விருந்தினராக வந்த ஹரி, மேடையில் பேசியபோது, கொரோனாவுக்கு மத்தியில் மருத்துவமனைகளில் பணியாற்றும், தடுப்பூசிகளை செலுத்த பணியாற்றும் முன்னணி சுகாதார தொழிலாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நிஜ வாழ்க்கை ஹீரோக்களிக்கு நன்றி தெறிவித்தார்.

“‘நீங்கள் எல்லோரையும் பாதுகாக்க கடந்த ஆண்டு தைரியமாகவும் தன்னலமின்றி போராடினீர்கள். நீங்கள் சேவை செய்தீர்கள், தியாகம் செய்தீர்கள், உங்களைத் தீங்கு விளைவிக்கும் விதத்தில் வைத்து, செலவுகளை அறிந்து துணிச்சலுடன் செயல்பட்டீர்கள். ‘நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்த முடியாத கடன்பட்டிருக்கிறோம்.” என நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி மரியாதை செலுத்தியுள்ளார்.

அப்போது இளவரசர் ஹரியின் உரைக்கு அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ஊடகங்களில் ஒளிபரப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment