Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

களுபோவில மருத்துவமனையின் நிலை குறித்து ஊடகவியலாளர்

களுபோவில மருத்துவமனையில் காணப்படும் நிலை குறித்த தனது சொந்த அனுபவங்களை ஊடகவியலாளர் திலக்சானி மதுவந்தி முக நூலில் அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்தும் படங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் தனதுபதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியா குறித்து நான் தெரிவித்த செய்திகளை நான் தற்போது கண்முன்னால் பார்க்கின்றேன்.
தற்போது நேரம் இரவு ஒரு மணி 20 நிமிடம். இது களுபோவில மருத்துவமனையின்  கொவிட் வோர்ட். வோர்ட்டின் ஒரு கட்டிலில் இரண்டு மூன்று நோயாளிகள்.
அவர்கள் முற்றிலும் செயல்இழந்த நிலையில் உள்ளனர்.

வோர்ட்டின் தரையில் கட்டில்களிற்கு கீழே ஒக்சிசனுடன் படுத்திருக்கும் நோயாளிகள் தங்கள் உயிர்களை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தரையில் உள்ள நோயாளிகள் நடப்பதற்கு அச்சப்படுகின்றனர்.

ஏனைய பாதிக்கப்பட்ட நோயாளிகள்(நூற்றிற்கு மேற்பட்டவர்கள்) வெளியே கதிரைகள் மரங்களிற்கு கீழே காணப்படுகின்றனர். advertisement

தரையில் போர்வையுடனும் போர்வை இல்லாமலும் நோயாளிகள் காணப்படுகின்றன. இன்று காலையில் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

சில மணிநேரத்திற்கு முன்னர் என் கண்முன்னால் இருவர் உயிரிழந்தனர். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் காணப்படுகின்றனர்.
கடவுள்கள் போல அவர்கள் களைப்பின்றி தங்கள் கடமைகளை செய்கின்றனர்.

எனது தாயார் கொரோனாவிற்காக இவ்வாறு போராடிக்கொண்டிருந்தவேளை எனது தந்தை ஒருஒக்சிசன் கருவிக்காக  காத்திருந்தார்.
இதனை விட உதவியற்ற நிலையில்லை.

நாளை நானும் பாதிக்கப்படலாம். நான் சொல்வதற்கு ஒரு விடயம்தான் உள்ளது. கொரோனாவை குறைத்துமதிப்பிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை அவதானமாகயிருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவனமாக கவனித்துக்கொள்ளுங்கள்.

நான் இந்தியா குறித்து தெரிவித்த செய்திகளை இன்று நான் கண்முன்னால் பார்க்கின்றேன்.
கவனமாகயிருங்கள் – கவனமாகயிருங்கள்
திலக்சானி மதுவந்தி – என அவர் பதிவிட்டுள்ளார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment