![](https://paarvaionline.com/wp-content/uploads/2021/05/21-609.jpg)
ஜெர்சி தீவில் மீன்பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.
பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு இடையில் உள்ள சேனல் தீவுகளில் ஜெர்சி தீவு மிகப்பெரியது. அங்கு பிரித்தானியா ஆதரவுடன் சுய ஆட்சி நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தீவில் மீன்பிடிக்க வரும் பிரான்ஸ் மீனவர்களுக்கு ஜெர்சி அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனங்கள் தெரிவித்தது, அதுமட்டுமின்றி மின்சாரத்தை துண்டிப்போம் என என எச்சரிக்கையும் விடுத்தது.
இதனிடையே, ஜெர்சி தீவின் முதலமைச்சருடன் உரையாடிய பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அவர்களுக்கு உறுதியான ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பதட்டங்களை உடனடியாக குறைக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஜெர்சி தீவின் முதல்வர் Senator John Le Fondre-வும் வலியுறுத்தினர் எனவும், மீன்பிடி உரிமம் தொடர்பில் ஜெர்சி மற்றும் பிரான்சுக்கு இடையில் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என பிரித்தானியா பிரதமர் அலுவகத்தின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிரெக்ஸிட் பிந்தைய மீன்பிடி உரிமைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 60 பிரான்ஸ் மீன்பிடி படகுகள் இன்று காலை ஜெர்சி தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துரைமுகம் அருகே கூடியுள்ளது.
பிரான்ஸ் மீனவர்களின் போராட்டத்தால் கடல் போக்குவரத்து தடைப்படும் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைமையை கண்காணிக்க ஜெர்சி தீவு அரசாங்கத்தின அனுமதியுடன் பிரித்தானியா இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு இரண்டு போர்க்கப்பல்களை ஜெர்சி தீவுக்கு அனுப்பியுள்ளது. பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்சும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.