Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம சேவையாளர் சம்மேளனம்

முன்னுரிமை பட்டியலை மீறும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உறுப்பினர்களின் உறவினர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டமையை கண்டித்து கிராம சேவையாளர் சம்மேளனம் இன்று இரவு முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிக்கார இதனை அறிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கமும் தமது போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் மற்றும் இரண்டாவது கோவிட் அலைகளின் போது, கிராம சேவையாளர்கள் இரவும் பகலும் சிறப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது கிராம சேவையாளர் ஒருவரும் கோவிட் தொற்றினால் மரணமானார். மேலும் பல அதிகாரிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே தமது நிலைமையைக் கருத்தில் கொண்டு தமக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தபோதும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை என்று சுமித் கொடிக்கார குறிப்பிட்டார்.

இருப்பினும், பெரும்பாலான அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ,அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனமும் இந்த விடயத்தில் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது.

எனவே, நாடு முழுவதும் மொத்தம் 12,000 கிராம சேவையாளர்கள்; தங்களது அனைத்து கடமைகளிலிருந்தும் விலகியிருக்க முடிவெடுத்துள்ளதாக கிராம சேவையாளர் சம்மேளன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த மோசமான நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment