கொள்ளையடிக்கப்பட்ட பிக்காசோ மற்றும் பியட் மொண்ட்ரியன் கலைப்படைப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கிரீஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் இருக்கும் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகத்தில் மிகவும் பிரபலமடைந்த இரு கலைப்படைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டில், பாப்லோ பிக்காசோ மற்றும் பியட் மொண்ட்ரியன் போன்ற ஜாம்பவான்கள் அந்த கலைப்படைப்புகளை வரைந்துள்ளார்கள். கடந்த 1949 ஆம் வருடத்தில் ஸ்பெயின் ஓவியரான பாப்லோ பிக்காசோ, க்யூபிஸ்ட் பெண்ணை வரைந்திருந்தார்.
அதனை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜி படைகளை எதிர்த்து கிரீஸ் மக்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக கிரீஸ் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மொண்ட்ரியன் என்ற டச்சு ஓவியர், கடந்த 1905 ஆம் வருடத்தில் ஆற்றங்கரை காற்றாலையை ஓவியமாக வரைந்திருந்தார்.
16 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய ஓவியரான குக்லீல்மோ காகியா பேனா மற்றும் மையினை ஓவியமாக வரைந்திருந்தார்.
இவைகள் கடந்த 2012 ஆம் வருடத்தில் ஜனவரி 9 ஆம்திகதி அன்று திருடப்பட்டுள்ள நிலையில் தர்பொழுது மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை மீட்கப்பட்ட ஓவியங்களில் குக்லீல்மோ காகியாவின் ஓவியம் இருக்க வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.