இது புதிய இந்தியா, இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேட் அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடிஇ ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பெண்களை போர் விமானிகளாக்க வாய்ப்பு வழங்கி உள்ளோம் என்றும் பெண் வீரர்களுக்கும் ஆண் வீரர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராணுவ வீரர்களுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் நாடு இந்தியா என்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை முறியடிக்க எந்த சக்தி வந்தாலும் அதை நாம் முறியடிப்போம் என்று கூறினார்.தேசிய போர் நினைவகம்: சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் 25இ942 வீரர்களின் பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
ராணுவத்தின் 4 விதமான முக்கியத்துவங்களை குறிக்கும் வகையில் மைய மண்டபம் 4 சக்கரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு சக்கரத்தின் மீது 15.5 மீட்டர் உயரத்தில் அணையா விளக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட்டை தொடர்ந்து தலைநகரில் இரண்டாவது அணையா விளக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய போர் நினைவகத்தைச் சுற்றி பல்வேறு போர் திறன்களை குறிக்கும் வகையில் 600 கிலோ முதல் 1000 கிலோ வரை எடை கொண்ட 6 வெண்கல சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் நினைவு சின்னங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக ரக்ஷா சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று புறம் சூழப்பட்ட இதில் 600-க்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. சுவர் போல் நின்று நாட்டை காக்கும் வீரர்களை குறிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ நிகழ்ச்சிகள் அனைத்தும் இனி இந்த நினைவுச் சின்னத்திலேயே நடத்தப்படும் என்றும் மறைந்த வீரர்களுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் வீரர்களுடன் கலந்துரையாடும் வகையிலும் விரைவில் வசதி செய்யப்பட உள்ளது. தேசிய போர் நினைவுச் சின்னத்தில் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் அதே சமயம் மையப்பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தினமும் மாலையில் முகாம் திரும்புதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.