எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகர்த்தெறிந்தனர்.
இதில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. விமானப்படையின் இந்த அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசாரும் கொல்லப்பட்டான். யூசுப் அசார் 1999-ம் ஆண்டு ஏர்பஸ் IC 814 விமானத்தை கடத்தியவன் ஆவான். புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 12 நாட்களில் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி விமானப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலகோட் என்ற பகுதியில் நடத்தப்பட்டது. அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமான படைக்கு சொந்தமான 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்து தாக்குதல் நடத்தின. சுமார் 1000 கிலோ வெடிபொருட்களை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் பாலகோட்டில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்திருந்த ஒரு தீவிரவாதிகள் முகாமை 6 முறை குண்டுவீசி தகர்க்கப்பட்டது. 3 தீவிரவாதிகள் முகாம்களை இந்திய விமானப்படை 90 வினாடிகளில் அழித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் விமானப்படை தாக்குதலில் தகர்க்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய புலனாய்வு அமைப்பு கண்டறிந்ததாகவும், மேலும் இந்த முகாம்கள் பொதுமக்கள் வாழும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு புல்வாமா தாக்குதலை போல் மீண்டும் ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாகவும்இ அதற்கான பயிற்சி முகாம் நடத்தி வந்துள்ளது அரசுக்கு தெரியவந்தது. மீண்டும் ஒரு தாக்குதலை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படை தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஏராளமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், மூத்த கமாண்டோக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் டர்ஹெரிவிக்கின்றன. ழூ 1971-க்கு பின் எல்லை தாண்டி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்துவது இதுவே முதன்முறையாகும்.