Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ரஷ்யாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்!

ரஷ்யாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க கடற்கரை, நீர்த்தேக்கம், பூங்கா என குளிர்ச்சியான பகுதிகளுக்கு ரஷ்யர்கள் படையெடுக்கின்றனர்.

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது இந்தியாவில் 40, 41 டிகிரி செல்சியஸ் என வெயில் கொளுத்துவது சர்வ சாதாரணம் என்றாலும் குளிர் பிரதேசமான ரஷ்யாவில் நிலவும் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.

தலைநகர் மாஸ்கோவிலும் இதே நிலைமைதான். மாஸ்கோவில் கடந்த திங்கட்கிழமை பதிவான 34.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 120 ஆண்டுகளில் இல்லாதது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நகரின் மையத்தில் அரசு கட்டிடங்களின் எதிரே அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளின் அருகே அமர்ந்துகொண்டு மக்கள் இளைப்பாறுகின்றனர். நீரூற்றுகளில் வரும் தண்ணீரில் விளையாடியபடி நீண்டநேரம் பொழுதை கழிக்கின்றனர்.

கடற்கரைகள், பூங்காக்கள் மட்டுமின்றி ஒருசிலர் ரஷ்யாவின் எகோடியா நகரில் பனிப்படலங்கள் நிறைந்த பகுதிகளுக்கும் பயணிக்கின்றனர்.

கோடை காலத்தில் இறைச்சி மற்றும் சூடான உணவுகளை தவிர்க்கும் ரஷ்யர்கள், ஐஸ்கீரிம் மற்றும் குளிர்பானங்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பருவநிலை மாறுபாடே ரஷ்யாவில் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment