சிறுகதை மொழி இலக்கியம்

கனவு

காலை எழுந்ததும் தினசரி வேலைகள் செய்தால் அவள். தன் இரண்டு வயது குழந்தை எழுவதற்கு முன் கணவரை அலுவலகம் அனுப்பி வைக்க வேண்டும்.  அவசரம் அவசரமாக செய்தால் அந்த பரபரப்பான நேரத்திலும் அவள் மனதில் ஓடியது அந்த விஷயம் தான்,

 ஒரு வாரமாகவே அவள் மனதில் வலியை கொடுத்தது.

அவர் அப்படி என்னிடம் பேசியிருக்க கூடாது, அவர் இப்படியெல்லாம் பேசுவார் என்பதே அவளுக்கு அன்றுதான் தெரியும் இவ்வளவு நாள் நான் ஏமாந்து போனேனா இல்லை அவர் ஏமாற்றினாரா! அவர் அன்பு காட்டுவது போல் நடித்தாரா! என்று யோசிக்கும் போதே கணவர் அழைத்தார், கனி என்று,

இதோ வந்துட்டேன் என்று சொல்லி கொண்டே காலை உணவு வைத்து விட்டு சமையலறை  சென்றால். 

கணவர் சாப்பிட்டு கிளம்பும் போது அன்பாக,. பாத்திரமா இரு, கடைக்கு பாத்து போ, ரோடு பாத்து கிராஸ் பண்ணு என்று எப்போதும் சொல்லும் அறிவுரை சொல்லி விட்டு கிளம்பினார்.

அவள் கோபகமா இருப்பது தெரிந்தும் அவன் கடமைக்காக சொல்லி விட்டு சென்றான்.

மீண்டும் மீண்டும் அவளுக்கு ஓடியது மனதில் நான் செய்தது தவறா?  

அதற்காக என் அப்பா என் அம்மாவை எப்படி பேசிநாரோ அதே வார்த்தைகளை திரும்ப கேட்டது போல் ஒரு வார்த்தை!  

உன்னால எனக்கு  எந்த உபயோகம் இல்லை, பத்து பைசா பிரயோஜனம் இல்லனு என் அம்மாவை, அப்பா சொன்ன வார்த்தையை மறுபடி அவர் கணவர் சொல்லி கேட்டது அவள் மனதை பின்னோக்கி தள்ளியது, ஆம் கனிக்கு  அப்பா நல்ல அப்பாவாக இருந்தார், ஆனால் அவளது அம்மாவிற்கு நல்ல கணவராக இல்லை.

எப்போதும்  திட்டி கொண்டும், அம்மா வேலைக்கு செல்லாத காரணத்தில் அவளுக்கு எதுவும் தெரியாது,.. என்ற மன நிலையில் வார்த்தைகளை வீசுவார் 

இதை பார்த்து  வளர்ந்த அவள் கண்டிப்பாக திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தால், படித்தால் பட்டம் பெற்றால், வேலைக்கும் சென்றால்,  இரண்டு வருடம் மட்டுமே.

அடுத்து திருமணம், அடுத்த ஐந்து வருடம் குழந்தைகாக மருத்துவமனைக்கு அலைந்தால் கனி,  அதில் அவள் கனவு கரைந்து போனது,

இப்போது முப்பதிரண்டு வயதாகும் கனி தன் கணவர் பேசிய பேச்சில், தன் அம்மாவின் வலியை மீண்டும் உணர்ந்தாள்.

கனி எழுந்தாள் கண்ணாடி முன் நின்றாள்!

என்ன கனி சோகமா இருக்க எனக்கு தெரியும் நீ ஒருநாள் இப்படி  என் முன்னாடி நிப்பனு, உன் ஆசை உன் அம்மா ஆசை கனவு எல்லாம் மறந்துட்டியா இல்லை உனக்கு அது தேவை படலையா?

உன் கணவர் உன்ன ரொம்ப நல்லா பாத்துக்குறாருனு பெருமிதம் பட்ட இன்னைக்கு உன் அம்மாவோட சிகிச்சைகாக ஒரு ஐம்பதாயிரம் எடுத்து குடுத்ததுக்கு எப்படி பேசிட்டாரு பாத்தியா!

என்னைக்கு இருந்தாலும் ஆண்கள் அப்படித்தான் கனி, 

அவர் கேட்டது சரிதானே அவர் உழைப்பில் வந்த பணத்தை நீ ஏன் இஷ்டத்துக்கு செலவு பண்ற,  இதுவரை நீ செலவு செய்தது அவர் குடும்பத்துக்கு அதுனால அவர் கேள்வி கேக்கல,

உன் வீட்டுக்கு செய்யணும்னா நீ சம்பாரிச்சு செய்,

நீ மறந்துட்டியா நீ ஆசைப்பட்டதே உங்க அம்மாவை பைனான்சியலா நல்லா வச்சிருக்கணும் அதுக்கு நாம வேலைக்கு போகணும்னு,. இப்போ எங்க போச்சு உன் ஆசை, கனவு எல்லாம் . 

குழந்தையை காரணம் காட்டாத. 

நீ படிக்குறப்போ மல்டி talented,.. ஒரே நேரத்துல டான்ஸ்,ஸ்போர்ட்ஸ்,படிப்புனு சாதிச்சுருக்க

சரி விடு நீ முடிவு பண்ணு, நீ கணவரே உலகம் வாழ போறியா இல்லை, உன் கனவுக்கு உயிர் கொடுக்க போறியா?

என்று அவள் மனசாட்சி கேட்டது.

குழந்தை அழும் சத்தமும் கேட்டது,

வேகமாக ஓடினாள், குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டாள் 

 என் செல்லக்குட்டி தூங்கி எழுந்தாச்சா!

அம்மா இன்னைலருந்து  அரசு வேலைக்காக படிக்க போறேன் தங்கம் அம்மா சொல் பேச்சு கேட்டு சமத்தா இருக்கியா,

பேசவே தெரியாத தன் இரண்டு வயது பிள்ளை சிரித்து கொண்டே,  ம் என்று தலை ஆட்டியது!

அவளுக்குள் நம்பிக்கை வர வைத்தது,     அவள் தன் அம்மாவின் கனவை நிறைவேற்றுவாள் என்று.

நிதி சுதந்திரம் பெண்ணுக்கு அவசியம்.

Recent posts

மனிதன் இன்னும் முழுமையாக அறியாத மர்ம உலகம்

பிரபஞ்சத்தின் மகத்துவத்தின் முன் மனித அறிவு ஓர் அணுவின் அளவே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்திருந்தாலும், இன்னும் மனிதன் முழுமையாக அறியாத மர்மங்கள் ஏராளம். இந்தக்...
Thamil Paarvai

அமேசானின் மருத்துவப் பொக்கிஷங்கள்

அமேசான் மழைக்காடு, உயிரியல் பன்முகத்தன்மையின் களஞ்சியமாக மட்டுமல்லாமல், பழங்குடி மருத்துவ அறிவின் விலைமதிப்பற்ற தொகுப்பையும் கொண்டுள்ளது. பாரம்பரிய மற்றும் நவீன அறிவியல் ஆய்வுகள் இணையும் இந்த எல்லையில்,...
Thamil Paarvai

அமேசான் மழைக்காடு: அறியாத மர்ம உலகம்

“பூமியின் நுரையீரல்” என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடு, நமது கிரகத்தின் மிக முக்கியமான மற்றும் மர்மமான பகுதிகளில் ஒன்றாகும். தென் அமெரிக்காவில், கிட்டத்தட்ட 5.5 மில்லியன் சதுர...
Thamil Paarvai

அமேசான் மழைக்காட்டின் தாவரங்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

அமேசான் மழைக்காடு உலகின் மிகப் பெரிய பல்லுயிர் பெருக்கம் கொண்ட சூழலமைப்பாகும். இங்கு கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இந்தக் கட்டுரையில், அமேசானின் மிக முக்கியமான மற்றும் ஆச்சரியமான...
Thamil Paarvai

காலம் மாறலாம்… மனிதர்கள் மாறுவதில்லை!

யாழ்ப்பாணத்தின் வடக்கே, கிளிநொச்சியை நோக்கிச் செல்லும் பாதையில், “வன்னிப் பூமி” என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அதன் பெயர் ‘முள்ளியவளை’. இந்த ஊரின் மண்ணுக்கும்,...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

ஒரு ஆழமான பயணம்

மனிதர்களுக்கு எப்போதும் மேலே வானத்தை விட கீழே பூமியின் உட்பகுதியில் ஒரு கட்டுக்கடங்காத ஆர்வம் உண்டு. ஆனால் பூமிக்குள் நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? உண்மையில்,...
Thamil Paarvai

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட மர்மப் பயணம்

“நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்?” – இந்த மூன்று கேள்விகளுக்கும் இடையேயே மனித வாழ்க்கையின் முழு மர்மமும் அடங்கிக் கிடக்கிறது. பிறப்பு என்பது ஒரு...
Thamil Paarvai

வெற்றியைத் தாண்டிய வாழ்க்கையின் அர்த்தம்

“வெற்றி” – இந்த ஒற்றை வார்த்தைக்காக மனிதன் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கிறான். அதிகப் பணம், உயர்ந்த பதவி, பெரிய வீடு, விலையுயர்ந்த கார், புகழ், பட்டங்கள்...
Thamil Paarvai

Leave a Comment