துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த அக்.30ல் தொடங்கியது. இக்கண்காட்சியானது வரும் ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஆசியா ,ஐரோப்பிய, அரபு நாடுகள் என 78 நாடுகளின் கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அரங்கங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஒரே இடத்தில் எல்லா நாடுகளின் உணவு பழக்க வழக்கங்கள், புகழ்பெற்ற ஆடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் எண்ணிலடங்கா பொருட்கள் பற்றி அறிந்து கொள்ளவும் வாங்கவும் இயலும். மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உயரமான துபாய் புர்ஜ் கலீபா மாதிரி கட்டிடம் மற்றும் பல்வேறு மாதிரி வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான நுற்றுக்கணக்கான விளையாட்டு சாதனங்கள், வீடியோ கேம்ஸ்கள் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 50 லட்சத்திற்கும் மேல் மக்கள் பங்கேற்கின்றனர். பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகிறது. 3500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. செயற்கை தண்ணீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் படகில் காய்கறிகள் மற்றும் பழ வகைகளும் விற்கப்படுகிறது.
Recent posts
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்
பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
புதிய பாதையை நோக்கிய கனடா
கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்
தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...




