“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்” என்று தெரிவித்த மஹிந்த அணியினர், “ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு குப்பையில் தூக்கிவீச வேண்டும். அதன் பரிந்துரைகள் அனைத்தையும் அடியோடு நிராகரித்து உலக நாடுகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பவேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நாவின் புதிய தீர்மானத்துக்கு இலங்கை அரச குழு இணை அனுசரணை வழங்கியமை மகா தவறு. நாட்டின் ஜனாதிபதி சுமந்திரன் அல்லர். மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தான்தான் நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் ஜெனிவாவில் செயற்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானமே ஆகும். இதனை வெறும் தீர்மானமாக நாம் நினைக்கக்கூடாது.
இந்தத் தீர்மானத்தை குப்பையில் தூக்கிவீச வேண்டும். குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்த எமது இராணுவத்தை எவரும் தண்டிக்கவே முடியாது” – என்றார்.
Recent posts
தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்
தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு
டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு
2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது
2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது
டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...




