சிறுகதை சிறுவர் பக்கம்

வாழ்க்கை லட்சியம்.

அன்று பத்தாம் வகுப்பு ஆண்டின் இறுதி நாள் ஆகும். வழக்கம் போல, ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார் : ‘நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்? இஞ்சினீயரா? டாக்டரா? விஞ்ஞானியா? தொழிலதிபரா? அரசு அதிகாரியா?”

மாணவர்களில் பெரும் பாலோர் இஞ்சினீயர், பத்து பேர் அரசு அதிகாரி, மற்றவர்கள் டாக்டர் என கூறினார்கள். ஒரே ஒரு மாணவர் மட்டும் எதுவும் சொல்லவில்லை. உடனே ஆசிரியர் ‘குருநாதன்! நீ சொல்!” என்று கேட்டார். நான் ஒரு பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக வேண்டும் என்று அவன் கூறினான். அதை கேட்டு வகுப்பில் இருக்கும் மாணவர்கள் சிரித்தனர். அதற்கு ஆசிரியர் ‘குருநாதன்! நீ ஏன் ஆசிரியர் ஆக வேண்டும், அதுவும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக விரும்புகிறாய் ஏன்?” என்று கேட்டார்.

பாரம்பரியமாக, இந்த வகுப்பின் கடைசி நாளில், மாணவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்கிற ஆசிரியர் யாவரும், மாணவர்களிடம், ‘இஞ்சினீயரா, அரசு அதிகாரியா, டாக்டரா” என்று கேட்கிறீர்களே தவிர, ஒருவரும், ஆசிரியரா? என கேட்பதில்லை? அதை கேட்பதற்காகத் தான், நான் பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக வேண்டும் என்று சொன்னேன்.

குருநாதன்! பெயருக்கு ஏற்ப, உன் பதில் சிறப்பானது! என் பணியை நானே மதிக்கா விட்டால், வேறு யார் மதிப்பர்? என்று தன் தவறை உணர்ந்தார்.

நீதி : ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் பணியையும் நேசிக்கவேண்டும் மதிக்கவேண்டும்.

Life ambition.

That was the last day of the tenth-grade year. As usual, the teacher asked the students: “What do you want to become in life? Engineer? Doctor? Scientist? Entrepreneur? Government officer?”

Among the students most students were said to be an engineer, ten said a government official, and the others a doctor. Only one student said nothing. Immediately the teacher said “Kurunathan! You tell me!” he asked. He said I wanted to become a tenth-grade teacher. The students in the class laughed when they heard it. The teacher asked, “Kurunathan! Why do you want to be a teacher, and why do you want to be a tenth grader?”

Traditionally, on the last day of this class, all the teachers ask the students the same question, “Are you an engineer, a government officer, a doctor?” To make you to ask that, I said I wanted to become a tenth-grade teacher.

Kurunathan! As the name implies, your answer is excellent! If I do not value my work, who else will? and realized his mistake.

Moral : Everyone should love and respect themselves and their work.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment