ஆன்மீகம் இந்து சமயம் ஐயப்பன்

அமைச்சர் அடுத்து என்ன செய்வது? ஐயப்பன் வரலாறு

👨‍⚖️ அமைச்சர் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் அவர் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருக்கு சாதகமாக அமைந்தது.

🗣️ அதாவது மணிகண்டன் தனது தாயிடம் பேச முயலுகையில், தாயோ தன் மகனிடம் பேசி மணிகண்டனிடம் பேசுவதை மறந்து தன் மகனிடம் உரையாடிக் கொண்டிருந்ததை கண்டார் முதலமைச்சர். அன்று முதல் அவரின் மனதில் எண்ணங்கள் யாவும் மாற்றம் அடையத் தொடங்கின.

👑 மகாராஜாவுக்கும், மகாராணிக்கும் இடையே அவர்களின் புதல்வன் உருவாகி அரண்மனையில் வளரத் தொடங்கினார். இந்த புதல்வரின் வருகையானது சிலரின் சூழ்ச்சிக்கு மிகவும் பயனுள்ள வகையில் மாறியது. அதாவது அமைச்சரின் சதித்திட்டத்திற்கு சுபிட்சமான பலன் அளிப்பதாக அமைந்தது.

🌊 ஒரு சமயம் அரண்மனையில் மணிகண்டன் இல்லாத சூழலில் மகாராணியும், அவரது மகனும் அரண்மனையில் இருந்த குளத்தில் விளையாடி காலத்தை கழித்துக் கொண்டிருந்தனர்.

💡 இந்த நிகழ்ச்சியைக் கண்ட அமைச்சர் இதுதான் மகாராணியிடம் உரையாடுவதற்கு தகுந்த சமயம் என எண்ணி மகாராணியிடம் தனது எண்ணத்தை அவர்கள் ஏற்கும் விதமாக மாற்றி உரைக்கத் தொடங்கினார்.

🙇‍♂️ அதாவது மகாராணியை கண்டு அவரிடம் தனது வணக்கத்தை தெரிவித்து தனது உரையாடலை தொடங்கினார். “உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது இருக்க வேண்டும்!” என்று தனது முதல் அம்பினைத் தொடுத்தார்.

🤔 அதற்கு மகாராணியும் “ஏன்? இவ்விதம் நீங்கள் உரையாடுகிறீர்கள்… நான் எப்பொழுதும் போலவே தான் உள்ளேன். இதற்கு என்ன பெரிய மனம் உள்ளது?” என்று அமைச்சரிடம் கூறினார்.

📢 அமைச்சரும் இரண்டாவது அம்பைத் தொடுக்க தொடங்கினார். “ஈன்ற மகன் இடத்தில், வனத்தில் கண்டெடுத்த மகனை இளவரசனாகவும், அரசருக்கு பின் அரசாளும் அரசுரிமையையும் அளிக்கும் தாங்கள் எவ்வளவு பெரிய மனதை கொண்டிருப்பீர்கள் என்று புலப்படவில்லையா?” என்று தனது உரையை முடித்தார்.

😟 அமைச்சரின் இந்த பதிலானது மகாராணியின் மனதில் ஒருவிதமான சஞ்சலத்தை உருவாக்கியது. 💭 அதாவது தான் ஈன்ற மகன் இருக்கும் பொழுது, மகாராஜாவுக்கு பின் தன் மகனே நாடாள வேண்டும் என்ற எண்ணம் மகாராணிக்கு உதயமாயிற்று.

👑 ஒருவேளை மணிகண்டன் நாடாளும் பட்சத்தில் நம் நாட்டிலுள்ள பிரதிநிதிகள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தொடங்கினாள்.

🪔 அதாவது ஈன்ற மகனுக்கு உண்டான அனைத்து உரிமைகளையும் வனத்தில் இருந்து கண்டெடுத்த மகனுக்காக தன் மகன் அனுபவிக்க வேண்டிய உரிமைகளை கொடுத்துவிட்டால்… என்று பேசத் தொடங்கி விடுவார்களோ என்று அவள் மனதில் பலவிதமான குழப்பங்களுடன் அமைச்சர் கூறிய பதிலும் ஒருவிதமான சங்கடத்தையும் உருவாக்கியது.

🐜⛰️ எறும்பு ஊற, பாறையும் கரையும் என்பது போல தனது நஞ்சான சொற்களின் மூலம் நல்மனம் கொண்ட மகாராணியின் மனதில் தீய எண்ணங்களை விதைத்து அவர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வகையிலும் மாற்றிக்கொண்டார் அமைச்சர். அதாவது மகாராணியின் மூலம் தனது சதித்திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார்.

🪶 தங்களுக்கு பிறந்த மகனே மகாராஜாவுக்கு, பின்பு அரியணை ஏற வேண்டுமே தவிர வனத்தில் இருந்து எடுத்து வந்த குழந்தை அரியணை ஏறுவது என்பது சரியானதாக தோன்றவில்லையே… என்று மகாராணியின் மனதில் மணிகண்டனை பற்றிய எண்ணங்களையும், அவனால் உண்டாகும் விபரீதங்களை பற்றியும் கொஞ்சம்… கொஞ்சமாக… எடுத்துரைத்து அதுவரை அன்பு கொண்ட மனதில் மணிகண்டன் என்றாலே வெறுக்கும் நிலைக்கு மாற்றிவிட்டார் முதலமைச்சர்.

🤔 அச்சமயத்தில் மணிகண்டன் அவ்விடம் வர அதுவரை அன்புடன் பார்த்து வந்த அன்னையின் கண்களில் மணிகண்டன் தனது மகனின் உரிமையைப் பறித்துச் செல்லும் ஒருவராகவே தெரிந்தான்.

🏰 அரண்மனையில் மகாராஜாவும், மற்ற அமைச்சர்களுடன் தனக்கு அடுத்து யார் இப்பகுதியை ஆளப்போகின்றார்கள் என்பதை அறிவிக்கும் பொருட்டு அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அந்த ஆலோசனையில் மணிகண்டன் தனக்குப்பின் அரசாள வேண்டும் என்பதே மன்னனின் ஆழ்ந்த விருப்பமாக இருந்தது.

📜 மகாராஜாவும், மணிகண்டன் வருகைக்குப்பின் மணிகண்டனை இளவரசனாக அறிவித்து முடிச்சூட்ட வேண்டும் என்று தனது அமைச்சர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பதை கேட்ட மகாராணி தன் கண்களால் கண்டு, செவிகளால் கேட்டு மிகுந்த கோபமும், ஆவேசமும் கொண்டார்.

Recent posts

சபரிமலைஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள் .

🛕 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோவிலில் பல விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. 🕉️ முக்கிய பூஜைகள்: 🌅உஷத் கால...
Thamil Paarvai

ஐயப்பன் கோவிலில் தேங்காய் வழிபாடு எதற்காக?

🙏 ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது..! 🙏 🛕 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது,...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை): (1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி...
Thamil Paarvai

சிலுவையில்இயேசுகூறியஏழுஉபதேசங்கள்

முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை...
Thamil Paarvai

புனித வெள்ளி என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படும் ஒரு புனித நாளாக இந்த புனித வெள்ளி எனும் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. இது பொதுவாக கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இயேசுபிரான் உயிர்...
Thamil Paarvai

இயேசு ராஜாவாக வருகிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம்...
Thamil Paarvai

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்..

🦚 முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம். தை மாதத்தில் பௌர்ணமியன்று பூசம்...
Thamil Paarvai

Leave a Comment