சிறுகதை சிறுவர் பக்கம்

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் ஒருவன், ‘நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்!” என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அவன் குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குச் சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.

குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்றவர்கள், அவனின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதேனும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர். காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து தங்கள் முட்டாள்தனத்தை எண்ணி வெட்கப்பட்டனர்.

கதையின் கருத்து : நீங்கள் செயல்படும் முன் சிந்தியுங்கள்.

Great Foolish..

Once upon a time people living in a country thought they were the greatest intellectuals in the world. But they do not know that they are all exact fools.

One day they decided to build a large house of wood. They decided to go to the forest to pick the best tree for it. At that time, one of them said, “I′m going in a horse-drawn carriage first. You are all come back!” Everyone accepted it. He rode his horse and went to the forest. But on the way, his pony fell on a stone. The ax in his hand went away and fell. He too had fallen into a deep pit.

Others, who followed the horse-drawn carriage, saw his axe lying in the way. Others thought there might be some important reason why he left the axe. So they all put away the axe they had taken in their hands. They went to the forest and selected a suitable tree for cutting. But who doesn′t have an axe in hand? They all sat together and were ashamed of their stupidity.

Moral of ther story : Think before you act.

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

இவருக்கு இருந்தாலும் இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது.

ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர்...
Thamil Paarvai

Leave a Comment