
உணவில்லாமல் கூட மனிதன் ஓரிரு நாட்கள் வாழமுடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர்வாழ்வது என்பது சாத்தியமில்லை. தண்ணீர் அருந்துவதால் பலவித மருத்துவப் பயன்கள் நமது உடலுக்கு கிடைக்கின்றது.
👉 நாம் சுத்தாமான தண்ணீரை தான் அருந்துகிறோமா என்று சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் நம் அன்றாட தேவைக்காக தண்ணீரை சேமித்து வைக்கின்றோம். இவ்வாறு நாம் தினந்தோறும் சேமித்து வைக்கும் தண்ணீரை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
👉 நீங்கள் தண்ணீரை சேமித்து வைக்க காப்பர் அல்லது சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். இதனால் தண்ணீரின் தன்மை மாறாது. காப்பர் பாத்திரங்களில் சேமித்த தண்ணீரை அருந்துவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
👉 நீங்கள் தொட்டிகள் மற்றும் டிரம்களில் தண்ணீரை சேமித்து வைப்பவராக இருந்தால், சு+ரிய வெளிச்சம் படும்படி தொட்டிகள் மற்றும் டிரம்களை வைத்து, தண்ணீரை சேமிக்க வேண்டாம்.
👉 தினந்தோறும் அன்றாட தேவைகளுக்காக தண்ணீரை புட் கிரேடு பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் பாட்டில்களில் சேமித்து வைக்கலாம். சாதாரண பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது.
👉 தண்ணீரை எதில் சேமித்து வைத்தாலும், அதனை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

👉 திறந்த நிலையில் இருக்கும் தண்ணீரை பருகாமல் தவிர்ப்பது உங்கள் உடலுக்கு நல்லது.
👉 பலரும் பாட்டில்களில் தண்ணீரைச் சேமித்து வைப்பார்கள். பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்கும்போது, பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம். மேலும் பாட்டிலின் உள்பகுதி மற்றும் மூடிகளை நன்றாக சுத்தம் செய்வது அவசியமாகும்.
👉 தண்ணீரைக் குடித்தவுடன் பாட்டில்களை தவறாமல் மூடி வைக்க வேண்டும்.
👉 நீங்கள் பாட்டிலில் வாய் வைத்து குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், மற்றவருக்கு இதைப் பயன்படுத்தக் கொடுக்காதீர்கள்.