Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு .

விஞ்ஞானத்தின் சிறப்பை இந்நாளில் அறியாதவர் எவரும் இல்லையென்றே சொல்லாம். அதற்கு ஏற்றவாறு விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது ஜப்பான் விண்வெளியில் இருக்கும் குப்பைகளைக் குறைக்கும் நோக்கத்தில் புதிதாக ஒரு செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளது. அந்த செயற்கைக்கோளைப் பற்றி வாங்க பார்க்கலாம்.

இதில் எப்படி விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்ப முடியும்?

👉 ஜப்பானின் சுமிட்டோமோ வனவியல் (Sumitomo Forestry) நிறுவனம், கியோட்டோ பல்கலைக்கழகத்துடன் (Kyoto University) இணைந்து, மரத்தினால் செய்யப்பட்ட ஒரு செயற்கைக்கோளை 2023 ஆண்டுக்குள் தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யுமென்று, சமீபத்தில் வெளியான பிபிசி இன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 சுமிட்டோமோ வனவியல் நிறுவனம் என்பது, ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான சுமிட்டோமோ குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

👉 சுமிட்டோமோ நிறுவனம் தற்போது வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியை எதிர்க்கும் மரப்பொருட்களை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

என்ன ரகசிய திட்டம்??

🚀 சுமிட்டோமோ உருவாக்கிவரும் இந்த தனிச்சிறப்பு பொருளை ‘ஆர் அண்ட் டி ரகசியம்” என்று அழைக்கிறது.

🚀 இது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் வெளியிடாது என்று அதன் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

🚀 ஆனால், இந்த திட்டத்தின் செயல்பாடுகள் எப்படிச் செயல்படும் என்பதை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

🚀 முதலில், இந்த திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் பூமியில் தீவிர சூழலில் தாக்குப்பிடிக்கும் பல்வேறு வகையான மரங்களைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள், தற்போதைய செயற்கைக்கோள்களைப் போலவே, தீங்கு விளைவிக்கும் பொருள்களை வெளியிடாமல் பார்த்துக்கொள்வது.

🚀 பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது எரிந்துபோகும் மர செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் முதல் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

🚀 தீவிர வெப்பநிலையைத் தக்கவைக்கும் சரியான வகையான மரத்தைக் கண்டுபிடித்த பிறகு, விஞ்ஞானிகள் செயற்கைக்கோளின் பொறியியல் மாதிரியை உருவாக்குவார்கள்.

🚀 அதன் பிறகு, விஞ்ஞானிகள் குழு செயற்கைக்கோளின் விமான மாதிரியைத் தயாரிப்பார்கள்.

🚀 பின்னர், உருவாக்கப்பட்ட பாதுகாப்பான மர செயற்கைக்கோள் விண்வெளி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும் என்று கியோட்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஜப்பானிய விண்வெளி வீரருமான தகாவோ டோய் கூறியுள்ளார்.

🚀 பெருகி வரும் விண்வெளிக் குப்பை புதிய ராக்கெட் ஏவுதல்களுக்கும், விஞ்ஞானிகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

🚀 உலக பொருளாதார மன்றத்தின் கணிப்புப் படி, 10 சென்டி மீட்டர் அளவுக்குப் பெரிய சைசில் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 விண்வெளிக் குப்பை துண்டுகள் உள்ளன என்றும், இன்னும் பல விண்வெளிக் குப்பைகள் கணிக்க முடியாத வகையில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

🚀 இதன் காரணமாக விண்வெளியில் ராக்கெட் மோதலுக்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

😎 மரத்தில் செயற்கைக்கோளா?? சாத்தியமாக்கும் ஜப்பான் விஞ்ஞானிகள்!! 😎

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment