ஆரோக்கியம் இயற்கை அழகு டிப்ஸ்

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின் அடியில் தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் இரவு நேரங்களில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு என்ன காரணம்? என்று நாம் பெரியவர்களிடம் கேட்டால், அதற்கு அவர்கள் மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வார்கள். அவர்கள் அவ்வாறு சொல்வதற்கு என்ன காரணம்? என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

😴 மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் வாயு அவசியம் தேவை. ஆக்சிஜன் இல்லையெனில் நம்மால் மூச்சுவிட முடியாது. நாம் சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகின்றோம்.

😴 மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி ஆக்ஸிஜன் அவசியமோ, அதேபோல் மரங்களும் தன்னை பாதுகாத்து கொள்ள சூரிய ஒளி, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு மிகவும் அவசியம். எனவே, இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு, மரமானது ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

😴 மரங்கள் விடும் ஆக்ஸிஜனை தான் நாம் சுவாசிக்கின்றோம். நாம் சுத்தமான காற்றை உள்வாங்கி, அசுத்த காற்றை வெளியிடுகின்றோம். ஆனால் மரங்கள் அசுத்த காற்றை உள்வாங்கி சுத்தமான காற்றை நமக்கு தருகிறது.

😴 மரங்கள் இரண்டு விதமாக சுவாசிக்கிறது… பகலில் அசுத்த காற்றான கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதேபோல இரவில் ஆக்ஸிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.

student Lie down under tree

😴 எனவே, இத்தகைய சூழ்நிலையில் நாம் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் படுத்து உறங்கும் போது, நமக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காது. அந்த நேரத்தில் மரங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை நாம் சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

😴 இதன் காரணமாகத் தான் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இவ்வாறு தூங்குவதை தவிர்ப்பதற்காகவே, நம்பாத சிலருக்காக மரத்தில் பேய் இருக்கிறது என்று பெரியவர்கள் சொன்னார்கள்.

Recent posts

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

அவல் பால் கொழுக்கட்டை

அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- அவல்...
Thamil Paarvai

சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள்

மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது...
Thamil Paarvai

இந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம் !!

இன்று பலரும் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்வதற்காக பலவகை அழகுச்சாதனப் பொருட்களை தேடி வாங்குகிறார்கள். இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். 👧 செயற்கையான அழகுச்சாதனப்...
Thamil Paarvai

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள் !!

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள்....
Thamil Paarvai

சருமத்திற்கு பொலிவைத் தரும் கேரட்!!

இயற்கையாகவே இனிப்புத் தன்மையுடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த கேரட்டை உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் ஏற்படாது. இப்போது இந்த...
Thamil Paarvai

Leave a Comment