கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்கு காரணம் இவர்தான் – தோனி

ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்கிழமை) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் களமிறங்கிய வேகத்தில் வரிசையாக பெவிலியனுக்கு நடையை கட்டினர். முதல் ஓவரில் சாஹர் பந்தில் கிறிஸ் லின் ஆட்டமிழந்தார். 2-ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங் பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். 3-ஆவது ஓவரில் சாஹர் பந்தில் ராணா ஆட்டமிழந்தார். இதையடுத்துஇ 5-ஆவது ஓவரில் உத்தப்பாவையும் சாஹர் வீழ்த்தினார். இதனால், அந்த அணி 24 ரன்களுக்குள் 4 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன்பிறகு, ஓரளவு தாக்குப்பிடித்த கொல்கத்தா கேப்டன் கார்த்திக் மற்றும் ஷூப்மன் கில்லை தாஹிர் வீழ்த்த அந்த அணி இன்னும் இக்கட்டான நிலைக்கு சென்றது. இதனால்இ ரஸல் கொல்கத்தா அணிக்கான பேட்டிங் பொறுப்பை ஏற்று விளையாடினார். எனினும் அவரும் தாஹிர் பந்தில் தூக்கி அடிக்க முயன்று ஆட்டமிழந்திருக்கக்கூடும். ஆனால், அந்த கேட்சை ஹர்பஜன் தவறவிட்டதால் ரஸலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், சாவ்லா அவருக்கு ஒத்துழைப்பு தராமல் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

இதனால், தனிநபராக இருந்த ரஸல் பெரும்பாலான ஸ்டிரைக்கை தானே எடுத்து விளையாடினார். எனினும், அவரால் வழக்கமான பாணியில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால்இ அவர் கொல்கத்தா அணியை 100 ரன்களை கடக்கச் செய்தார்.

கடைசி ஓவரில் மட்டும் அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்தார். இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் ரஸல் தனது அரைசதத்தையும் எட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 44 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் மற்றும் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய தோனி பேசியதாவது …

ஹர்பஜன் சிங் எப்போது எந்த இடத்தில் இருந்தாலும் நன்றாக ஆடுவார். தாஹிர் தனது வேலையை சரியாக செய்து விட்டார். இவர்கள் இருவரும் தான் இன்றைய போட்டியின் வெற்றிக்கு காரணம். அவர்கள் இருவரும் சரியான இடத்தில் பந்தை வீசினார்கள் என்று பேசினார் தோனி.

Recent posts

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு...
Thamil Paarvai

Leave a Comment