கிரிக்கெட் விளையாட்டு

ஐ.சி.சி. , டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது!

டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலானது, கிரிக்கெட் அணிகளுக்கு மிக முக்கியமான தரவரிசைப் பட்டியலாக பார்க்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிடும்.

இந்த பட்டியலில், முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு சம்பியன்ஷிப் பட்டத்தோடு, ஐசிசி.யின் கதாயுதமும் வழங்கப்படும். அத்துடன் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

அத்தோடு, இரண்டாவது மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ள அணிகளுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

இதனடிப்படையில், இந்த தரவரிசைப் பட்டியலில், முதல் இடம் பிடித்துள்ள இந்திய அணிக்கு, கதாயுதமும், 10 லட்சம் டொலர்கள் பரிசுத்தொகையையும் வழங்கப்படுகின்றது.

தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிக்கு 5 லட்சம் டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படுகின்றது.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள தென்னாபிரிக்காவிற்கு, இரண்டு லட்சம் டொலர்களும் வழங்கப்படுகின்றது.

மேலும், நான்காவது இடம் பிடித்துள்ள அவுஸ்ரேலியாவுக்கு 1 லட்சம் டொலர்களும் வழங்கப்படுகின்றது.

சரி தற்போது புள்ளிகளுடன் கூடிய தரவரிசைப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் உள்ள அணிகளின் விபரங்களை பார்க்கலாம்.

இப்பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் அணி, 116 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 108 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா 105 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அவுஸ்ரேலியா 104 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 104 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை அணி 93 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

மேலும், பாகிஸ்தான் அணி 88 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், விண்டிஸ் அணி 77 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பங்களாதேஷ் 68 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், சிம்பாப்வே 13 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.

Recent posts

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு...
Thamil Paarvai

Leave a Comment