Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடா அரசு அதிரடி நடவடிக்கை ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் பயணிகள்…

கனடாவுக்கு வரும் பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை நாளை முதல் எக்கச்சக்கமாக அதிகரிக்க உள்ளது.

கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் பயணிகள் கொரோனா சோதனைக்கு உட்பட மறுத்தாலோ, ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுத்தாலோ, அவர்களுக்கு தற்போது 3,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை முதல் அந்த அபராதத்தொகை 2,000 டொலர்கள் உயர்ந்து, 5,000 டொலர்களாக ஆக்கப்பட இருக்கிறது.

கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் அனைத்துப் பயணிகளும் கனடாவுக்குள் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும், 14 நாட்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய நிலையில், கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வரும் வரையில் அரசு நியமித்துள்ள ஹொட்டல் ஒன்றில் மூன்று நாட்களுக்கு அவர்கள் தங்கவேண்டும் என்றும், அதற்கான கட்டணமான 2,000 டொலர்களை தாங்களே செலுத்தவேண்டும் என்றும் பிப்ரவரி 22ஆம் திகதி கனடா அரசு அறிவித்தது.

அத்துடன், கனடாவுக்கு வருவதற்கு முன்பும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

ஆனால், பல பயணிகள், 3,000 டொலர்கள் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு ஹொட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்தாமலே சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே, இந்த ஹொட்டல் தனிமைப்படுத்தலே தேவையில்லை என்றும், மக்களே தங்கள் தனிமைப்படுத்துதலை ஏற்பாடு செய்துகொள்ளட்டும் என்றும் அரசின் ஆலோசனைக் குழு பிரச்சினை எழுப்பியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

ஏப்ரல் 14க்கும் மே 24க்கும் இடையில் மட்டும், 1,000க்கும் அதிகமான பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுத்ததால் அபராதம் செலுத்தியுள்ளார்கள். 400க்கும் அதிகமான பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு முன்னும், விமான நிலையம் வந்த உடனும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாததற்காக அபராதம் செலுத்தியுள்ளார்கள் என கனடா அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment