Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய பிரதமர் பூர்வக்குடியின குழந்தைகள் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி…

பூர்வக்குடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகி கனடாவை அதிரவைத்துள்ள நிலையில், அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கனடாவிலுள்ள பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் பயின்ற உண்டுறை பள்ளிகளில், 1870களுக்கும் 1990களுக்கும் இடையில், 150,000 கனேடிய பூர்வக்குடியின, Métis மற்றும் Inuit என்னும் பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் தங்கிப் படிப்பதற்காக அனுப்பப்பட்ட நிலையில், அவர்களில், குறைந்தது 4,100 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளர்கள், அதாவது 50 மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை 6,000க்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்ற பகுதியில் அமைந்துள்ள பூர்வக்குடியின மாணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் ராடார்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு 215 சிறுவர் சிறுமியர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து கனடாவே அதிர்ந்தது.

அடுத்து, ஆல்பர்ட்டாவில் உள்ள பூர்வக்குடியின மாணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் குறைந்தது 821 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகவே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

ஒரு தந்தையாக, என்னிடமிருந்து என் குழந்தைகள் பறிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது என்று கூறியுள்ள ட்ரூடோ, ஒரு பிரதமராக பூர்வக்குடியின குழந்தைகளை தங்கள் சமுதாயத்திலிருந்து திருடிக்கொண்ட இந்த வெட்கத்துக்குரிய கொள்கை என்னை அருவருப்படையச் செய்கிறது என்றார்.

தங்கள் பிள்ளைகளை மீண்டும் பார்க்க முடியாத சமுதாயத்தினரை எண்ணிப்பாருங்கள். அவர்களது நம்பிக்கைகள், கனவுகள், திறன், அவர்கள் என்னவெல்லாம் சாதித்திருப்பார்கள். அவர்கள் என்னவாகவெல்லாம் ஆகியிருப்பார்கள். அவை எல்லாம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டதே என்று கூறியுள்ளார் அவர்.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment