Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய பிரதமர் பூர்வக்குடியின குழந்தைகள் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி…

பூர்வக்குடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகி கனடாவை அதிரவைத்துள்ள நிலையில், அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கனடாவிலுள்ள பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் பயின்ற உண்டுறை பள்ளிகளில், 1870களுக்கும் 1990களுக்கும் இடையில், 150,000 கனேடிய பூர்வக்குடியின, Métis மற்றும் Inuit என்னும் பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் தங்கிப் படிப்பதற்காக அனுப்பப்பட்ட நிலையில், அவர்களில், குறைந்தது 4,100 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளர்கள், அதாவது 50 மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை 6,000க்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்ற பகுதியில் அமைந்துள்ள பூர்வக்குடியின மாணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் ராடார்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு 215 சிறுவர் சிறுமியர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து கனடாவே அதிர்ந்தது.

அடுத்து, ஆல்பர்ட்டாவில் உள்ள பூர்வக்குடியின மாணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் குறைந்தது 821 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகவே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

ஒரு தந்தையாக, என்னிடமிருந்து என் குழந்தைகள் பறிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது என்று கூறியுள்ள ட்ரூடோ, ஒரு பிரதமராக பூர்வக்குடியின குழந்தைகளை தங்கள் சமுதாயத்திலிருந்து திருடிக்கொண்ட இந்த வெட்கத்துக்குரிய கொள்கை என்னை அருவருப்படையச் செய்கிறது என்றார்.

தங்கள் பிள்ளைகளை மீண்டும் பார்க்க முடியாத சமுதாயத்தினரை எண்ணிப்பாருங்கள். அவர்களது நம்பிக்கைகள், கனவுகள், திறன், அவர்கள் என்னவெல்லாம் சாதித்திருப்பார்கள். அவர்கள் என்னவாகவெல்லாம் ஆகியிருப்பார்கள். அவை எல்லாம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டதே என்று கூறியுள்ளார் அவர்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment