Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய பிரதமர் பூர்வக்குடியின குழந்தைகள் மரணம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி…

பூர்வக்குடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகி கனடாவை அதிரவைத்துள்ள நிலையில், அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கனடாவிலுள்ள பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் பயின்ற உண்டுறை பள்ளிகளில், 1870களுக்கும் 1990களுக்கும் இடையில், 150,000 கனேடிய பூர்வக்குடியின, Métis மற்றும் Inuit என்னும் பூர்வக்குடியின சிறுவர் சிறுமியர் தங்கிப் படிப்பதற்காக அனுப்பப்பட்ட நிலையில், அவர்களில், குறைந்தது 4,100 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளர்கள், அதாவது 50 மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை 6,000க்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்ற பகுதியில் அமைந்துள்ள பூர்வக்குடியின மாணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் ராடார்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு 215 சிறுவர் சிறுமியர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து கனடாவே அதிர்ந்தது.

அடுத்து, ஆல்பர்ட்டாவில் உள்ள பூர்வக்குடியின மாணவ மாணவியர் பயிலும் உண்டுறை பள்ளி ஒன்றில் குறைந்தது 821 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகவே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

ஒரு தந்தையாக, என்னிடமிருந்து என் குழந்தைகள் பறிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது என்று கூறியுள்ள ட்ரூடோ, ஒரு பிரதமராக பூர்வக்குடியின குழந்தைகளை தங்கள் சமுதாயத்திலிருந்து திருடிக்கொண்ட இந்த வெட்கத்துக்குரிய கொள்கை என்னை அருவருப்படையச் செய்கிறது என்றார்.

தங்கள் பிள்ளைகளை மீண்டும் பார்க்க முடியாத சமுதாயத்தினரை எண்ணிப்பாருங்கள். அவர்களது நம்பிக்கைகள், கனவுகள், திறன், அவர்கள் என்னவெல்லாம் சாதித்திருப்பார்கள். அவர்கள் என்னவாகவெல்லாம் ஆகியிருப்பார்கள். அவை எல்லாம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டதே என்று கூறியுள்ளார் அவர்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment