ஆன்மீகம் கிறிஸ்தவம்

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை):

(1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்குஎன் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். இங்கே, தேவன் உலகின் பாவங்களை தன் மீது வைத்ததால், இயேசு தனது கைவிடப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினார் – அதன் காரணமாக, தேவன் இயேசுவிடம் இருந்து “விலகி” போக வேண்டியிருந்தது. பாவத்தின் எடையை இயேசு உணர்ந்துகொண்டதால், அவர் நித்தியம் முழுவதுமாய் ஒரேஒரு முறை மட்டும் தேவனிடமிருந்து ஒரு பிரிவை அனுபவித்தார். இது சங்கீதம் 22:1 இல் உள்ள தீர்க்கதரிசன கூற்றின் நிறைவேறுதலாகும்.

(2) பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் (லூக்கா 23:34). இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை முழுமையாக அறிந்திருக்கவில்லை ஏனெனில் அவர்கள் அவரை மேசியாவாக அங்கீகரிக்கவில்லை. தெய்வீக சத்தியத்தைப் பற்றிய அவர்களின் அறியாமையினால் அவர்கள் மன்னிப்புக்கு தகுதியானவர்கள் என்று அர்த்தமல்ல, கிறிஸ்துவின் வேண்டுதல் அவரை பரியாசம் பண்ணும்போதும் கூட அவர் காண்பித்த அவருடைய தெய்வீக கிருபையின் எல்லையற்ற இரக்கத்தின் வெளிப்பாடாகும்.

(3) இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்கா 23:43). இந்த கூற்றில், சிலுவையில் மறித்துக்கொண்டு இருந்த கள்ளர்களில் ஒருவனுக்கு அவன் இயேசுவோடு பரலோகத்தில் இருப்பான் என்று இயேசு வாக்குக் கொடுக்கிறார். இது எதற்காக வழங்கப்பட்டது என்றால், அவன் மறித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் கூட, குற்றவாளியாகிய கள்ளன் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவர் யாராக இருக்கிறார் என்பதை அங்கீகரித்தான் (லூக்கா 23:42).

(4) பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார் (லூக்கா 23:46). இங்கே, இயேசு விருப்பத்துடன் தனது ஆத்துமாவை பிதாவின் கைகளில் கொடுத்த செயல், அவர் இறக்கப்போகிறார் என்பதையும், பிதாவாகிய தேவன் அவருடைய பலியை ஏற்றுக்கொண்டார் என்பதையும் குறிப்பிடுகிறது. அவர் “தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்” (எபிரெயர் 9:14).

(5) அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: “ஸ்திரீயே, அதோ, உன் மகன்என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: “அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் (யோவான் 19:26-27). இந்த வசனத்தில் இயேசு, எப்போதும் இரக்கமுள்ள மனதுருகும் மகனாக, அவருடைய பூமிக்குரிய தாய் அவருடைய மரணத்திற்குப் பிறகு கவனித்துக்கொள்ளப்படுவதை உறுதிசெய்கிறார்.

(6) தாகமாயிருக்கிறேன் என்றார் (யோவான் 19:28). சங்கீதம் 69:21 -ல் இருந்து மேசியாவின் தீர்க்கதரிசனத்தை இயேசு இங்கே நிறைவேற்றுகிறார்: “என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.” அவர் தாகமாக இருப்பதாகக் கூறி, அவர் ரோம போர்ச்சேவகர்கள் அவருக்கு கசப்புக் கலந்த காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள், இதுவும் சிலுவையில் அறையப்படுபவர்களுக்கு கொடுப்பது வழக்கம், இதனால் இந்த தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றினார்.

(7) முடிந்தது!” (யோவான் 19:30). இயேசுவின் இந்த கடைசி வார்த்தைகள், அவருடைய பாடுகள் முடிந்துவிட்டது மற்றும் அவருடைய பிதா அவருக்கு ஒப்புவித்த முழு வேலையும், அதாவது நற்செய்தியைப் பிரசங்கிப்பது, அற்புதங்களைச் செய்வது மற்றும் அவருடைய ஜனங்களுக்கு நித்திய இரட்சிப்பைப் அளிப்பது, என யாவும் முடிந்தது, நிறைவேற்றப்பட்டது, நிறைவேறியது. பாவத்தின் கடன் செலுத்தப்பட்டது.

Recent posts

🌿 ஒரு புதிய ஆன்மீக பயணத்திற்கான தொடக்கம் 🌿

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்கு தியாகம், கருணை, மன்னிப்பு, மற்றும் புதிய தொடக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. விபுதி புதன் (Ash Wednesday) என்பது அந்த ஆன்மீகப் பயணத்தின் முதல்...
Thamil Paarvai

செல்வங்கள் பெருக… 

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்ட ஒன்று பணம். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம்...
Thamil Paarvai

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?…

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது...
Thamil Paarvai

சபரிமலைஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள் .

🛕 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோவிலில் பல விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. 🕉️ முக்கிய பூஜைகள்: 🌅உஷத் கால...
Thamil Paarvai

ஐயப்பன் கோவிலில் தேங்காய் வழிபாடு எதற்காக?

🙏 ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது..! 🙏 🛕 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது,...
Thamil Paarvai

அமைச்சர் அடுத்து என்ன செய்வது? ஐயப்பன் வரலாறு

👨‍⚖️ அமைச்சர் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் அவர் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருக்கு சாதகமாக அமைந்தது. 🗣️ அதாவது மணிகண்டன் தனது...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

சிலுவையில்இயேசுகூறியஏழுஉபதேசங்கள்

முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை...
Thamil Paarvai

Leave a Comment