ஆன்மீகம் கிறிஸ்தவம்

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி வரை நடக்கும்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 4 மணிக்கு ஜெபமாலை நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பலியும், 7 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். பின்னர் கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரார்த்தனைக்கு பிறகு ஆயர் கொடியேற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு 3-ம் திருப்பலி நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு பனிமயமாதாவுக்கு பொன் மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம்ட 4-ந்தேதி இரவு பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. மறுநாள் மாலை 5 மணிக்கு பாளை மறை மாவட்ட பி‌ஷப் அந்தோணி சாமி தலைமையில் 8-ம் திருப்பலி நடக்கிறது.

கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சி நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள், பங்குதந்தை குமார் ராஜா, உதவி பங்கு தந்தை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Recent posts

🌿 ஒரு புதிய ஆன்மீக பயணத்திற்கான தொடக்கம் 🌿

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்கு தியாகம், கருணை, மன்னிப்பு, மற்றும் புதிய தொடக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. விபுதி புதன் (Ash Wednesday) என்பது அந்த ஆன்மீகப் பயணத்தின் முதல்...
Thamil Paarvai

செல்வங்கள் பெருக… 

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்ட ஒன்று பணம். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம்...
Thamil Paarvai

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?…

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது...
Thamil Paarvai

சபரிமலைஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள் .

🛕 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோவிலில் பல விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. 🕉️ முக்கிய பூஜைகள்: 🌅உஷத் கால...
Thamil Paarvai

ஐயப்பன் கோவிலில் தேங்காய் வழிபாடு எதற்காக?

🙏 ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது..! 🙏 🛕 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது,...
Thamil Paarvai

அமைச்சர் அடுத்து என்ன செய்வது? ஐயப்பன் வரலாறு

👨‍⚖️ அமைச்சர் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் அவர் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருக்கு சாதகமாக அமைந்தது. 🗣️ அதாவது மணிகண்டன் தனது...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை): (1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி...
Thamil Paarvai

Leave a Comment