சிறுகதை சிறுவர் பக்கம்

நல்ல சிந்தனை.

புத்திசாலி அரசர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், தன் ராஜ்ஜியத்திற்கு ஒரு புதிய முதலமைச்சரை நியமனம் செய்ய விரும்பினார். அவரது மூன்று அமைச்சர்களின் அறிவை சோதித்து, புதிய முதலமைச்சராக அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க விரும்பினார்.

அரசர் மூன்று அமைச்சர்களையும் தனது அறைக்கு அழைத்து, நீங்கள் காட்டில் இருந்து பல இளம் விலங்குகளை கொண்டு வர வேண்டும் என்றார். இந்த பணிக்காக உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நாள் தருகிறேன் என்று கூறினார். அரசர், அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதை சோதிக்க விரும்பினார்.

விரைவில் மூன்று அமைச்சர்களும் பல காடுகளுக்கு சென்றனர். ஒரு நாள் இரண்டு அமைச்சர்கள் ஐந்து யானை கன்றுகள், இரண்டு கரடி குட்டிகள் மற்றும் இரண்டு புலி குட்டிகளைக் கொண்டு வந்தார்கள். மூன்றாவது அமைச்சர் வெறுங்கையுடன் வந்தார். அரசர் வெறும் கையுடன் வந்ததற்கான காரணத்தை மூன்றாவது அமைச்சரிடம் கேட்டார். அதற்கு, அவர் அரசே! இந்த இளம் விலங்குகள் அவற்றின் தாயிடம் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு சிறியவை. அவற்றின் தாய்களும் அவைகளை இழந்து வாடும். இதை செய்ய என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை என்று பதிலளித்தார்.

அரசர், நீங்கள் இந்த விலங்குகளை பற்றி மிகவும் யோசித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்கள் மூன்று பேரையும் சோதித்து பார்க்க விரும்பினேன். மூன்றாவது அமைச்சரின் அன்பான செயலின் காரணமாக, அரசர் அவரை தனது ராஜ்ஜியத்தின் புதிய முதலமைச்சராக அறிவித்தார்.

நீதி : நேர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை செயல்கள், நேர்மறையான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

Good Thought.

There lived a wise king. He wanted to appoint a new chief minister for his kingdom. He tested the knowledge of his three ministers and wanted to select one of them as the new chief minister.

The king took the three ministers to his room and said, you should bring many young animals from the forest. He said that he would give all of you only one day for this work. The king wanted to test how each of them would think.

Soon all three ministers went to several forests. One day two ministers brought five elephant calves, two bear cubs, and two tiger cubs. The third minister came empty-handed. The king asked the third minister the reason for coming with bare hands. For that, he said to the king! These young animals are so small that they cannot be separated from their mother. Their mothers will lose them too. He replied that my mind did not agree to do this.

The king told I am glad at your so much thought about these animals. I wanted to test all three of you. Due to the kind deed of the third minister, the king announced him as the new chief minister of his kingdom.

Moral: Positive thoughts and positive actions lead to positive results.

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

Leave a Comment