புற்றுநோயால் தன் குடும்ப உறுப்பினர்களை இழந்த வலியை, பெரும் சாதனையாக மாற்றியுள்ளார்.

இவரது தாத்தா மற்றும் நான்கு அத்தைகள், மாமாக்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரமான தனிப்பட்ட இழப்புதான் இவரைப் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தூண்டியுள்ளது.
உலகமே வியக்கும் சாதனைகள்:மார்பகப் புற்றுநோய் செல்களை எலிகள் மூலம் சோதனை செய்து இவர் காட்டிய முன்னேற்றம் உலகிலேயே இதுவே முதல் முறை (World’s First).
லண்டன் சுகாதார ஆராய்ச்சி தினத்தில் சிறந்த போஸ்டர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
செக் குடியரசின் ப்ராக் நகரில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் தனது ஆய்வைச் சமர்ப்பிக்கத் தேர்வாகியுள்ளார்.
கல்விப் பயணம்:மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை முடித்து, தற்போது கனடாவின் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உயிர் இயற்பியலில் (Medical Biophysics) முனைவர் பட்ட (PhD) ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அவரது ஆராய்ச்சியின் சாராம்சம்: Magnetic Particle Imaging (MPI) எனும் புதிய தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் செல்களைக் கண்டறிவது.
உலகத் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிதாரா பெர்னாண்டோவின் இந்தச் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துவோம்!




