ஈரானின் புரட்சிகர காவல்படை, அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Abraham Lincoln போர்க்கப்பலை வளைகுடாவில் தாக்கியதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனியை கொன்ற பிறகு, “அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் நிலமும் கடலும் பயங்கரவாத ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக மாறும் என ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலும் அதனுடன் இணைந்த மூன்று போர்க்கப்பல்களும் மத்திய கிழக்கிற்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
USS ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கடற்படையில் ஐந்தாவது நிமிட்ஸ்-வகுப்பு விமானம் தாங்கி கப்பல் ஆகும். இதில் எதிரி ரேடாரைத் தவிர்க்கும் திறன் கொண்ட சமீபத்திய F-35 ஸ்டெல்த் ஜெட் விமானங்களும் அடங்கும்.
தாக்குதல் குழுவில் டோமாஹாக் தரை தாக்குதல் கப்பல் ஏவுகணைகள் ஏற்றப்பட்ட மூன்று அழிப்பாளர்களும் உள்ளனர், மேலும் பொதுவாக அதே ஆயுதத்தை ஏவும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலும் இருக்கும்.
இந்நிலையில், அமெரிக்காவின் மிகப் பலம் பொருந்திய போர்க்கப்பலான USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளமை பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றது.
அதேநேரம், குறித்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவிடம் இருந்து இதுவரை எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.




