நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை இந்திய தேர்தல் ஆணையம் வாங்குகிறது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16-வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தமிழகத்தில் மக்களவை தொகுதிக்கு 179 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 29 பேர் பெண்கள். அதேபோன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த நிலையில், நேற்றும் இன்றும் விடுமுறையாகும். இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இந்த நிலையில் நாளை மறுநாளுடன்(26ம் தேதி) வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை மறு நாள் செவ்வாய் கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வது குறைவாகவே இருக்கும். எனவே, நாளை அதிகம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர். இதை தொடர்ந்து 27ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. அப்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிதானா என்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதை தொடர்ந்து, 29ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கிடையே, தேர்தல் என்று வந்துவிட்டாலே கள்ள ஓட்டைத் தடுப்பதற்காகவும், வாக்களித்தமைக்கு அடையாளமாக வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் அழியாத மை நினைவுக்கு வந்துவிடும்.வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் இந்த அழியாத மை தயாரிப்பு முழுவீச்சில் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மையை இந்திய தேர்தல் ஆணையம் வாங்குகிறது. மேலும், 26 லட்சம் பாட்டில் அழியாத மை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மைசூர் பெயின்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிட்(எம்பிவிஎல்) நிறுவனம்தான் பிரத்யேகமாக அழியாத மையைத் தயாரித்து வருகிறது. எம்பிவிஎல் நிறுவனம் கர்நாடக அரசால் நடத்தப்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தில் தரப்பில் கூறுகையில், ஏறக்குறைய 10 மில்லி அளவு கொண்ட 26 லட்சம் குப்பிகள் தயாரிக்கிறோம். இதுவரை 20 லட்சம் குப்பிகள் தயார் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் உத்தரவின்படி பல்வேறு மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு குப்பியில் இருக்கும் மை மூலம் 700 முதல் 750 வாக்களர்களின் விரலில் மை வைக்க முடியும்ஷ’ எனத் தெரிவித்தனர்.எம்பிவிஎல் நிறுவனத்தின் மேலாளர் சி. ஹராகுமார் கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டு அளித்த ஆர்டரைக் காட்டிலும் கூடுதலாக 4 லட்சம் குப்பிகளை தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. நாங்கள் 22 லட்சம் குப்பிகளை கடந்த மக்களவைத் தேர்தலுக்கு அனுப்பி வைத்தோம். இந்த முறை அதைக்காட்டிலும் 4 லட்சம் கூடுதலாகும்’ எனத் தெரிவித்தார்.
previous post
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...