சிறுகதை மொழி இலக்கியம்

கவசத்திற்குள் இரு ஆவி.

வாயுவேக வீரர்கள் இருவர். அவர்தம் கொள்கைகளை நிலைநாட்டும் முகத்தான் போட்டி ஒன்றை துவக்கி மோதுகிறார்கள்!

சர். காரெய்ன் மற்றும் சர். டாரண்ட் ஆகிய இரு வீரர்கள் சாகும் வரையில் மோதுவது என முடிவெடுத்து கையில் ஈட்டியுடன் ஆங்கிலேய முறைப்படி குதிரையில் இருந்து கொண்டு நேரடியாக முட்டிக் கொள்கிறார்கள். டாரண்ட் ஒரு வலிமை வாய்ந்த எதிரி என்று காரெய்னின் காதலி அவனை எச்சரிக்கிறாள். அன்பே! நீ என் அருகில் இருக்கையில் மாமலையும் ஓர் சிறு கடுகாம்! எனவே அஞ்சாதே! என்று காரெய்ன் கூறிப் பாய்ந்து புறப்பட்டு களம் புகுகிறான்!

ஈட்டிகள் பாய்கின்றன! தாழ்வான உயரத்தில் வலுவான இரு ஈட்டிகள் இடியென பாய்ந்து ஓசை எழுப்புகின்றன!

அய்யகோ!! அந்தோ பரிதாபம்! காரெய்ன் வீழ்கிறார்! டாரண்ட் வெற்றிக் களிப்பில் அருகே நெருங்குகிறார்! பரவாயில்லை ! நான் நேருக்கு நேராக தரையில் நின்று போரிடுவேன் என்ற உறுதியுடன் மோதுகிறார் காரெய்ன்!

புல்வெளியில் மின்னலென பளிச்சிட்டுப் பாய்ந்தன வாட்கள்! கவசங்களின் உராய்வு ஓசைகள் கோட்டையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தன! காரெய்னின் தலைக் கவசம் டாரண்டின் வாள் வீச்சின் முன்பு நிற்க முடியாமல் தெறித்து வீழ்கிறது!

வேறு ஒரு வீரனை காக்க நீ மோதினாய்! அவனைப் போன்று வீர மரணம் எய்த எண்ணுகிறாயா? இல்லை உனதருமை உயிருக்காக என்னிடம் உயிர்ப்பிச்சை கோரப் போகிறாயா?டாரண்ட்

ஒரு வீரனாக என் கடமை என்னவென்றால், உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். ஒன்று, நீ வீரனாக உனதருமை உயிரை கௌரவமான முறையில் விடு! அல்லது உன் உயிரைக் காத்துக் கொள்ள நான் தோற்று விட்டேன் என்று கதறு! டாரண்ட். அந்தோ! நான் இறந்து விட்டால் என்னருமைக் காதலி லேடாவை இழந்து விடுவேன் ஆகவே நான் தோற்று விட்டேன், விட்டு விடுகிறேன் என்று காரெய்ன் தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறார்.

நான் வாழ்வதே லேடாவுக்காகதான்! காரெய்ன்

நீ நிச்சயமாகத்தான் சொல்கிறாயா? உன்னைப் போன்ற கோழையை அவள் விரும்புவாளா இல்லை என்னைப் போன்ற மாபெரும் வீரனை விரும்புவாளா? லேடா நீ என்ன சொல்கிறாய்? டாரண்ட்

சில மணித்துளிகள் சென்றதும் லேடா தான் தேர்ந்து கொண்டவருடன் குதிரையில் விரைகிறாள்! ஏன் இப்படி செய்தாய் லேடா? என்று காரெய்ன் புலம்ப, பெண்கள் வீரரையே விரும்புவர்! கோழைகள் விட்டுக்கொடுத்து தான் ஆகா வேண்டும் என்று டாரண்ட் சொல்லிச் செல்கிறார்! ஹீ! ஹீ ! ஹீ ! கண்ணுங்களா! நான்தான் கருப்புக் கிழவி ஹெப்சிபா க்ரிம்! கதை இத்தோட முடிஞ்சிதுன்னு நடையைக் கட்டிடாதீங்க! சினிமால காட்டற மாதிரி ஆரேழு நூற்றாண்டுக்கு அப்புறமா லண்டன்ல,

ஒரு பழம்பொருள் கடையில் ஜின்னி என்கிற பெண் குட்டி தன் அப்பாகிட்ட இன்னொரு கவசமா அப்பா?

ஆமா ஆனா இது ரொம்ப ஸ்பெஷல் ஜின்னி! என்கிறார் அவளது தந்தை! அந்த கவசத்தை ஒரு பாட்டுக்கு பரிசாகப் பெற்றதாகவும், அந்த கவசத்தின் உரிமையாளர் உண்மையில் சர். காரெய்ன் பயன்படுத்தியது என்பதை அறியாமல் தூக்கிக் கொடுத்து விட்டார் என்று கூறுகிறார். இடைக்காலப் பாடல்களில் டாரண்ட்டிடம், காரெய்ன் தோற்று விட்டார் என்று உள்ளதே சரியா அப்பா! ஜின்னி சரிதான்! துல்லியமாக சொல்லணும்னா டாரண்ட்டின் கவசம் கூட இங்கேதான் மேலே இருக்கிறது!அப்பா

அவர்கள் இப்போ ஒன்று சேர்ந்தாச்சு! நான் இந்த இரு கவசங்களுக்கும் சேர்த்து மிக மிக அதிகமான தொகையைப் பெறுவேன்! இலண்டனில் உள்ள பழம்பொருள் சேகரிப்பவர் ஒருவரை நான் நாளைக்கு அழைத்து வருகிறேன்! என்று கூறி கிளம்புகிறார் அவர்!

அன்றிரவு அகால வேளையை நோக்கி நிமிடங்கள் நகர்ந்தன. எங்கோ ஒரு ஆந்தை தின்ற எலி செரிக்காமல் அலறும் சப்தம்! தூர ஒரு நாயில் ஊளை ஓசை காதைக் கிழித்தது! வினாடிகள், நிமிடங்களாகின! நிமிடங்கள் மணித் துளிகளாயின! திடீரென ஏதோ ஒன்று நகரும் சப்தம்! நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள சின்னி மாடியில் இருந்து இறங்கி வருகிறாள்! க்ரீச்! க்ரீச்! க்ரீச்! காலடியில் படிகள் நசுங்கின! இருளில் ஒரு உருவம் நிற்பதைக் கண்டு உற்று நோக்கிய சின்னி டாரண்ட்டின் கவசம் கண்டிப்பாக தனது இடத்தில் இருந்து நகர்ந்து இருக்கிறது என்பதைக் காண்கிறாள்!

மெல்லிய ஒளி என்னை ஏய்க்க முடியாது! அந்த கவசம் உள்ளே அவையின்றி நகர்ந்திருக்க முடியாது என்ற திட நம்பிக்கையுடன்,

ஈ!ஈ! இன்னொரு பேயா?

டாரண்ட் அடேய்பயந்தாங் கோலி!

காரெய்ன் நான் ஒன்றும் பயந்தாங்கோலி அல்ல! நீ என்னை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்!

நிறுத்துங்கள்ஜின்னி

முடியாது! என்னை கோழை என்றெண்ணும் இவனை விடமாட்டேன்! இவன் என்னை வீரன் என்று ஏற்கும் வரை போராடுவேன் காரெய்ன் உண்மையை மறுப்பதா? நீ கோழைதான் அதை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன்! டாரண்ட்

ஜின்னியின் பயம் ஆர்வமாக மாறியது கண்ணுங்களா! யாரவது அடிச்சிட்டு செத்தா யாரு கேக்குறா? வேடிக்கைதானே பார்க்கிறீங்க! ஹீ! ஹீ! ஹீ!

அவன்தான் கோழையாச்சே! அவனுக்கு எதுக்கு நீ ஆர்வமூட்டுறே? டாரண்ட் அவர் ஒண்ணும் கோழையல்ல! தான் தோத்தா சக வீரர்களிடம் அவமானப்பட வேண்டியிருக்கும்னு தெரிஞ்சும் காதலுக்காக சண்டையில விட்டுக் கொடுத்தார்! காதலுக்காக வாழ்ந்த அப்படி ஒரு மனுசன்தான் எனக்கு கணவனா வரணும்! அப்படி ஒருத்தரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்! ஜின்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கணக்கா ஆவிங்க ரெண்டும் வீரர்களின் சொர்க்கம் புகுந்தன! ஹீ! ஹீ! ஹீ! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையெல்லாம் படிச்சிருக்கீங்களா கண்ணுகளா? ஜின்னி தன்னோட அப்பாகிட்ட என்ன சொல்வா? அவ சொல்றதை அவளோட அப்பா நம்புவாரா? ஹீ! ஹீ! ஹீ! மண்டை ஒட்டு சூப் காத்திருக்கு கண்ணுகளா! அப்புறமா கனவில கதை சொல்ல வாறேன்! ஹீ! ஹீ! ஹீ!

Recent posts

கனவு

காலை எழுந்ததும் தினசரி வேலைகள் செய்தால் அவள். தன் இரண்டு வயது குழந்தை எழுவதற்கு முன் கணவரை அலுவலகம் அனுப்பி வைக்க வேண்டும்.  அவசரம் அவசரமாக செய்தால்...
Thamil Paarvai

மனித ஊனம்

ராமு தன் மனைவி செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கிறான் இது மூன்றாவது பிரசவம்.ஏற்கனவே இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். பெரிய மகள் புவனாவிற்கு பத்து வயதாகிறது.சிறிய...
Thamil Paarvai

பெண் என்பவள்…

ரமா என்பவள் மிகவும் திறமை வாய்ந்தவள். தான் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்த நேரம் போக கவிதைகள் எழுதி வருவாள். கவிதை போட்டிகளுக்கு கவிதை அனுப்புவாள்....
Thamil Paarvai

பெண்கள் 

ஓர் அழகிய மலை கிராமத்தில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் அவள் பிறந்தாள். ஆனால் அவள் தந்தைக்கோ, இளவரசியை பெற்றதைப்போல் பெரு மகிழ்ச்சி. அந்த மாபெரும் கூட்டு...
Thamil Paarvai

கோவலனின் வருகையால் வியப்படைந்த ஊர்மக்கள்…!!

இறைவனாலும் இயலாத செயல்:  பதினான்கு நாட்கள் சங்கமனின் மனைவி காத்திருந்து அவளுடைய கணவனுடன் இணைந்தாள். நீயும் அவளைப் போன்றே பதினான்கு நாட்கள் பொறுத்திருந்து கோவலனோடு மீண்டும் இணைவாய்....
Thamil Paarvai

பாண்டிய நாட்டின் நிலையை கேட்டறிந்த அரசன்..!!

ஆணையும், வாய்ப்பும்  செய்த தவறினை உணர்ந்து கையேந்தி நின்ற தனது தாயிடம் மாதவி, என் மகளை வளர்க்கும் வாய்ப்பினை உமக்கு தருகின்றேன். ஆனால் எக்காரணம் கொண்டும் அவளை...
Thamil Paarvai

சகல அலங்காரங்களோடு.. காட்சியளித்த கண்ணகி..!!

சிலப்பதிகாரம்…!!  நீலன், அரசனை வணங்கி தொழுத பின்பு சோழனும், பாண்டியனும் கூறிய உரையைக் கூறத் துவங்கினான்.  வீரத்தோடு போர்க்களத்தில் நில்லாமல் வாளையும், குடையையும் போட்டுவிட்டு தன் உயிரை...
Thamil Paarvai

கவிதைகள் 02

இதமாக..! என்னவளே!..உன் புன்னகை கண்டு உன்னிடம்பேசி மகிழ வந்தேன்!உன் சுடர் விழிப்பார்வையால் சூடாகினாய்..அதுகூட இதமாகத்தான் இருந்தது..தற்பொழுது பெய்த மழையின் குளிருக்கு..! புதுமைப்பெண் பெண்ணை பெண்ணால் கொல்லும்இந்த ஆணுலகில்...
Thamil Paarvai

அப்பா சொன்ன வாசகம்

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் தனது மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை அப்பா கவனித்தார். அருகில் வந்து, ஏன் தூங்கவில்லை? என்றார். மனசு சரியில்லை, என்றாள்...
Thamil Paarvai

Leave a Comment