யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது என மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக் கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது எனத் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
இது தொடர்பில் மாநகர முதல்வர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. ஏனெனில் அந்த பேரூந்து நிலையச் சூழல் கடந்த காலத்தில் மாநகர சபையின் அதிகாரத்தின் கீழ் இல்லாமல் போனதற்கு இந்த சுதந்திரக் கட்சியினரும் காரணம்.
அன்றிலிருந்து அங்கேயுள்ள பேரூந்து சேவையை விட வியாபார சேவையை நடாத்துவதனால் எழுந்த சர்ச்சையால் அப் பகுதியில் உள்ள கழிப்பறை பராமரிப்பும் பேரூந்து நிலையத்தின் கீழேயே உள்ளது. இவரின் கூற்றுமூலம் ஒன்று தெளிவாகியுள்ளது இவ்வாறான சேவைகளை போக்குவரத்து சபை நடாத்த முடியாது என்பதனை ஒப்புக்கொள்கின்றார்.
இதேபோன்றே இந்த நாட்டில் தமிழர்களை கொன்றொழித்தவர்கள் ஐ.தே.கட்சியே அன்றி சுதந்திரக் கட்சி அல்ல எனவும் கூறியுள்ளார். சந்திரிகா அம்மையாரின் 10 வருட ஆட்சி எந்த அரசின் ஆட்சி மகிந்த ராஜபக்சவின் 11 வருட ஆட்சி எந்தக் கட்சியின் ஆட்சி பண்டாரநாயக்கா சிறீமா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களை தங்கத் தாம்பூலத்திலா வைத்தீர்கள் வகை தொகை இன்றி கொனறொழித்தமையை மறந்து அல்லது மறைத்து பேச முற்படக்கூடாது .
செம்மணி முதல் நவாலி எனத் தொடர்ந்து இறுதி யுத்த காலத்தில் ஒரு லட்சம் பேர் வரையில் கொன்றொழித்தது உங்கள் கட்சி ஐ.தே.கட்சியும் சரி சுதந்திரக் கட்சியும் சரி இரண்டுமே கறை படிந்த கட்சியாகவே உள்ளது. இதில் யார் கூட கொன்றொழித்தீர்கள் என்பதே உங்கள் பிரச்சனை நீங்கள் அவர்களை மோதகம் என்றால் நீங்கள் கொழுக்கட்டை இதுதான் வேறுபாடே அன்றி இரண்டுமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான். அதாவது டட்லி – செல்வா ஒப்பந்தத்தினை கிழித்தமை எந்தக் கட்சி அதற்கு பிரதி உபகாரமாக ஐ.தே.க பண்டா செல்வா ஒப்பந்தத்தை கிழித்தனர்.
எமது சபையின் செயல்பாடுகளை திறம்பட நடாத்த முடியாமல் தற்போது இருப்பதற்கு தங்கள் கட்சியும் ஓர் காரண கர்த்தா. இவ்வாறுள்ள நிலையில் வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. வாயில் வந்தவற்றை உரையாற்ற முடியாது. இவ்வாறான தேசிய வாதக் கட்சிகளின் கூற்றை நம்பிச் செல்லும் எமது கோடாரிக் கம்புகளையும் எண்ணி மனம் நோக வேண்டியுள்ளது. அதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபை எப்போது கூட்டமைப்பின் பிடியில் வரும் என காத்திருந்த எமது புலம்பெயர் உறவுகள் தற்போது அழைத்து நிலமையை உணர்கின்றனர் என்றார்.
next post
Recent posts
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.
கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.
“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி
கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்
அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...




