இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அதிசய ஆயுர்வேத கோவிட் மருந்து? குவியும் ஆந்திர மக்கள்.. முதல்வர் ஜெகன் விசாரணைக்கு உத்தரவு

ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐசிஎம்ஆர் குழுவிற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா என்பவரது குடும்பம் கொரோனாவிற்கு இலவசமாக ஆயுர்வேத மருந்து கடந்த சில வாரங்களாக கொடுத்து வருகிறது, இந்த மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை அந்த பகுத உள்ளூர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பலர் உடனே நல்ல பலன் கிடைப்பதாக சொல்ல, மெல்ல மெல்ல அவரது புகழ் பரவ தொடங்கியது. குறுகிய நாட்களிலேயே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் நெல்லூருக்கு படை எடுத்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்திற்கு இலவச மருந்தினை வாங்க குவிந்தனர். கிட்டத்தட்ட ஒரே நாளில் 50 ஆயிரம் பேரை குவியத்தொடங்கினர்.

நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று செல்கிறார்கள். பலர் சமூக இடைவெளியை மறந்து எப்படியாவது அந்த இலவச மருந்தை வாங்கிவிட வேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள். அந்த மருந்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் குழுவினரும் நேரில் சென்று விசாரித்தனர்

முக்கியமான அவர் கண்ணிற்கு சொட்டு மருந்து கொடுத்த உடன் ஆக்சிஜன் லெவல் உடனடியாக அதிகரிப்பதாக மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இநத் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை மருந்து குறித்து எவரும் புகார் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் கொடுக்கும் மருந்துகளை மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆய்வத்திற்கு அனுப்பி உள்ளனர். ஆய்கத்தின் முடிவு வந்த உடன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அரசின் அனுமதி பெறாமல் மருந்து விநியோகிக்க கூடாது என்று ஆய்வுக் குழு ஆனந்தையா குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர் எனினும் மருந்து விநியோகம் நடந்த வருகிறது. மிகப்பெரிய கூட்டம் கூடிவருவதால் 3வது அலை பரவும் அபாயமும் எழுந்துள்ளது. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆயுர்வேத மருந்து குறித்து ஐசிஎம்ஆர் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment