அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு தொடர்பான ராபர்ட் முல்லரின் அறிக்கை குறித்து அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டோனால்ட் டிரம்ப்பின் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த எந்த ஒரு நபரும் ரஷ்யாவின் சதித்திட்டத்தில் உடந்தையாக இருக்கவில்லை என்று ராபர்ட் முல்லர் தமது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பர் அமெரிக்க காங்கிரஸ் சபையிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டனை தோல்வியுறச் செய்ய ரஷ்யா குறுக்கிட்டு வதந்திகளைப் பரப்பியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடத்த ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு நியமனம் செய்யப்பட்டது. இக்குழு 22 மாதம் விசாரணை நடத்தி சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதிக்குழு முன்பு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகைக்கு அறிக்கையின் விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் டிரம்ப் அரசு அறிவித்தது. தற்போது அந்த அறிக்கையில் டிரம்ப் அல்லது அவருடைய கட்சியின் ஒரு நபர் மீது கூட ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்படவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வில்லியம் பர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இவ்வாறு அமைப்பதற்கு அதிபர் டிரம்ப்பின் அழுத்தம் ராபர்ட் முல்லரின் விசாரணைக் குழுவின் மீது இருந்ததா என்றும் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க அதிபர் டிரம்ப்போ தம்மீதான எந்த ஒரு விமர்சனத்திற்கும் ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கும் பதில் அளிக்கவில்லை. அவர் புளோரிடாவில் உள்ள சொகுசு கடற்கரையில் தமது விடுமுறையைக் கழித்து வந்தார். இன்று அதிகாலை அவர் தனிவிமானம் மூலம் வாஷிங்டன் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப். ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை என்று கூறினார்.
Recent posts
தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்
தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு
டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு
2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது
2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது
டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...




