கவிதை மொழி இலக்கியம்

கவிதைகள் 02

இதமாக..!

என்னவளே!..
உன் புன்னகை கண்டு உன்னிடம்
பேசி மகிழ வந்தேன்!
உன் சுடர் விழிப்பார்வையால் சூடாகினாய்..
அதுகூட இதமாகத்தான் இருந்தது..
தற்பொழுது பெய்த மழையின் குளிருக்கு..!

புதுமைப்பெண்

பெண்ணை பெண்ணால் கொல்லும்
இந்த ஆணுலகில் மீண்டு வந்து
இம்மண்ணுலகில் வெற்றிப் பாதையில் தடம்
பதித்து கொண்டிருக்கும் என் பெண்ணினமே நீ
கடந்து வந்த பாதை என்ன பூப்பாதையா..
அல்ல அல்ல அது தீப்பாதை..
முடிந்ததோ அந்தப் பாதை
அல்ல அல்ல முயற்சிப்பாள்
என்றும் என் கோதை..
மேதை என பல மேடைகள் ஏறி
அவள் சாதனை செய்வாள்
சாகசம் புரிவாள்..
வெற்றிக் கனி அது எட்டாக்கனி..
என நினைக்கும் எம் பால் பெண்களுக்கு
வெற்றிப் பாதைகள் பல வழி திறப்பாள்
எடுத்துக்காட்டாய் அவள் என்றுமே இருப்பாள்
அவள் தான் எங்கள் புதுமைப்பெண்

அமைதி!

இறுகிய மனதுடன்
எனது பயணம்
வெளியே தூறல்
மனதுக்குள் குமுறல்
பாசமில்லா உலகில்
பாசாங்குடன் சிலர்
அமைதியை தேடி
அமைதியுடன் நான்…

வேண்டும்..!

பூலோகத்திலே ஒரு தோழி வேண்டும் புதுமைகள் நான் செய்திட
அனுதினமும் ஆனந்தமாய் ஆகிட
சோகத்தில் நான் சாய்கையில் தோளினை நீ தரவேண்டும்
கல்லூரி சாலையிலே கவி பாட வேண்டும்
கவிதையின் உச்சம் எனக்குள் காதலாய் மாற வேண்டும்
வஞ்சகமில்லா நெஞ்சங்கள் வேண்டும்
வாழ்விலே பல மாற்றங்கள் வேண்டும்
உன் புன்முறுவல் சிரிப்பில் புதைந்து போக வேண்டும்
சோகங்கள் எல்லாம் பூவாய் இதழாய் பூத்து குலுங்க வேண்டும்
என் வாழ்நாள் எல்லாம்..
தாய்வழி சொந்தமில்லை நீ எனக்கு..
இந்த தரணியிலே உன்னை அன்றி வேறு பந்தமில்லை நீ எனக்கு..
நாட்கள் எல்லாம் வாரங்கள் ஆகும்..
வாரங்கள் தோறும் மாதங்கள் ஆகும்..
மகிழ்ச்சியில் இன்பம் பொங்கும்!!

கண்ணீர்..!

தினந்தோறும்
அழுகிறேன் – என்
கண்ணீருக்கு பின்னால்
இருப்பது யார் என்று
எனக்கும் – என்
கண்ணீருக்கும் மட்டும் தான்
தெரியும்
அது
நீ என்று…

Recent posts

காலம் மாறலாம்… மனிதர்கள் மாறுவதில்லை!

யாழ்ப்பாணத்தின் வடக்கே, கிளிநொச்சியை நோக்கிச் செல்லும் பாதையில், “வன்னிப் பூமி” என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அதன் பெயர் ‘முள்ளியவளை’. இந்த ஊரின் மண்ணுக்கும்,...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

ஒரு ஆழமான பயணம்

மனிதர்களுக்கு எப்போதும் மேலே வானத்தை விட கீழே பூமியின் உட்பகுதியில் ஒரு கட்டுக்கடங்காத ஆர்வம் உண்டு. ஆனால் பூமிக்குள் நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? உண்மையில்,...
Thamil Paarvai

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட மர்மப் பயணம்

“நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்?” – இந்த மூன்று கேள்விகளுக்கும் இடையேயே மனித வாழ்க்கையின் முழு மர்மமும் அடங்கிக் கிடக்கிறது. பிறப்பு என்பது ஒரு...
Thamil Paarvai

வெற்றியைத் தாண்டிய வாழ்க்கையின் அர்த்தம்

“வெற்றி” – இந்த ஒற்றை வார்த்தைக்காக மனிதன் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கிறான். அதிகப் பணம், உயர்ந்த பதவி, பெரிய வீடு, விலையுயர்ந்த கார், புகழ், பட்டங்கள்...
Thamil Paarvai

கனவுகளை நோக்கிப் பயணிப்பதன் முக்கியத்துவம்

ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் கண்களில் ஒரு ஒளி இருக்கிறது. அந்த ஒளிக்குப் பெயர் – கனவு. வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்து ‘நானும் பறக்க வேண்டும்’...
Thamil Paarvai

இலங்கையின் நந்திக்கடல்: வரலாற்றின் சாட்சியாகும் ஒரு கடற்காயல்

இலங்கையின் வடகிழக்குக் கடற்கரையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நந்திக்கடல் (Nanthi Kadal) ஒரு வெறும் புவியியல் அமைப்பு மட்டுமல்ல; அது இலங்கையின் நவீன வரலாற்றின் முக்கிய சின்னமாகவும்,...
Thamil Paarvai

மீன்வளம், சூழலியல் மற்றும் மீள்வாழ்வின் பாதை (கட்டுரையின் இரண்டாம் பகுதி)

நந்திக்கடல்: முந்தைய கட்டுரையில் நந்திக்கடலின் வரலாறு, புவியியல் மற்றும் போரின் தாக்கம் ஆகியவற்றை விரிவாகப் பார்த்தோம். இப்போது, அந்தப் பகுதியின் தற்போதைய நிலை, மீன்வள ஆய்வுகள், சூழலியல்...
Thamil Paarvai

காலம் ஒரு நதி போன்றது

மாலை ஆறு மணிக்கெல்லாம் வீதிகள் அமைதியடையத் தொடங்கும் ஒரு சிறிய கிராமம் அது. திருநெல்வேலி மாவட்டத்தின் கிழக்கே, தாமிரபரணியின் கிளை நதி ஒன்றின் கரையில் அமைந்திருந்தது அந்த...
Thamil Paarvai

Leave a Comment