இந்திய சினிமா சினிமா செய்திகள் புதிய செய்திகள்

அநியாயமாக பரிதாபமாக.. உயிரை விட்ட “கனவு கன்னிகள்”.. நீடிக்கும் மர்மம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் மரணமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சித்ராவின் தற்கொலை சம்பந்தமாக விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தமிழகத்தின் சில நடிகைகளின் தற்கொலைகள் ஏன் மர்மமாகவே நடந்து முடிந்துவிடுகிறது என்ற சந்தேகமும் நமக்குள் வலுத்து வருகிறது.

அன்று முதல் இன்று வரை, திரையில் பார்த்தபோது நம் மனதில் கனவு கன்னிகளாக நின்றவர்கள்.. தேவதைகளாக ஒளிர்ந்தவர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவை தேடி கொண்டதன் மர்மம் இதுவரை விலகவே இல்லை.. இது சில்க் முதல் சித்ரா வரை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஸ்ரீதேவியும் இந்த லிஸ்ட்டில்தான் வருகிறார்.. பாத் டப்பில் குளிக்க சென்றவர் மயங்கி விழுந்து இறந்தார் என்ற தகவலை அடுத்து வேறு எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.. சில்க், விஜி, படாபட் ஜெயலட்சுமி, மோனல் உட்பட பலரும் இவர்களின் தற்கொலைகளுக்கு பின்னே மறைந்திருக்கும் நபர்கள் வெளிச்சத்துக்கு கடைசிவரை வரவே இல்லை. அந்த முடிச்சுகளும் அவிழ்க்கப்படவே இல்லை.

டிவி சீரியல்

கடந்த ஜூன் மாதம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இது டிவி சீரியலையும் விட்டுவைக்கவில்லை.. 2006ல் வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.. அதேபோல, மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

மதுரவாயல்

நடிகை சபர்ணா மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்… நிர்வாணமாக, அழுகிய நிலையில் அவரது பிணம் மீட்கப்பட்டது.. அந்த வரிசையில்தான் சித்ராவும் இணைந்துள்ளார். பணம், புகழ், பேர், அந்தஸ்து என அனைத்தும் கிடைத்தபிறகும் இவர்கள் ஏன் தற்கொலையை நாடுகிறார்கள்? இளைஞர்கள் பிரச்சனைகளை கையாள தெரியாமல், தன்னம்பிகையுடன் எதிர்கொள்ள முடியாமல் இப்படி முடிவெடுத்து விடுகிறார்கள் என்பதே பதிலாக கிடைக்கிறது.

தற்கொலைகள்

இதைவிட ஆச்சரியம், தற்கொலைக்கு உள்ளான பெண்கள் மன அழுத்தம் காரணமாகவே உயிரிழந்தனர் என்றாலும், இவர்களின் பின்னணியில், அவரவர்களின் ஆண் நண்பர்களே பிரதான காரணமாக இருந்திருக்கிறார்கள்… ஏதோ ஒரு வகையில், அவர்களிடம் பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்து, கடைசியில் தற்கொலை என்ற ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர்.. இந்த ஆண் நண்பர்கள், சிலருக்கு நேரடியான காரணமாக இல்லாவிட்டாலும், மறைமுமாக அவர்களின் தற்கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளனர்.

விசாரணை

ஆனால், நடிகைகளின் தற்கொலைகளுக்கு பிறகு இவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை.. ஒவ்வொரு நடிகைகளின் தற்கொலை சமயங்களில் அது சம்பந்தமான வழக்கு விசாரணை நடக்கிறது, புது புது தகவல்கள் வருகின்றன.. அத்துடன் காலப்போக்கில் அந்த நடிகையின் தற்கொலையே மறக்கடிக்கப்பட்டு விடுகிறது.

நடிகைகள்

இதுவரை இந்த பெண்களின் தற்கொலையில் தொடர்புடைய ஒருவரும் கைதாகி சிறைக்கு சென்ற வரலாறே இல்லை.. மாறாக, அந்த நடிகைகளின் மட்டற்ற புகழையும், கணக்கிலடங்கா பணத்தையும், அந்த நடிகைகளுடன் சேர்த்தே அனுபவித்ததுடன், இப்போதுவரை சமுதாயத்தில் மிடுக்காக நடமாடி வருகிறார்கள்.

மறதி

காதல், நட்பு என்று பழகி வந்த நிலையிலும், இவர்களின் நிஜஇயல்பு இதுதான் என்றுகூட தெரியாமல், அப்பாவி பெண்கள் தற்கொலையில் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை மாய்த்து கொண்டுள்ளது காலத்தின் கோலம்தான்.. அதைவிட, “மறதி ஒரு தேசிய வியாதி” என்பது நடிகைகளின் உயிருக்கே உலை வைக்கும் சிலருக்கு எத்துணை சாதகமாக போய்விடுகிறது!

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம்...
Thamil Paarvai

தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும்...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

Leave a Comment