இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் நாடு திரும்பியவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

கொவிட் – 19 காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக ஒரு  தொகுதி பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல்1124 விமானம் மூலம் சுமார் 283 பயணிகள் நேற்று (31.12.2020) கட்டுநாயக்கா விமான நிலையத்;தை வந்தடைந்த நிலையிலேயே அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தேவைகளின் நிமித்தம் குறுகிய கால பயண ஏற்பாடுகளுடன் இந்தியாவிற்கு சென்ற சுமார் 1500 இற்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் கொவிட் – 19 பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருந்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை நாடிய நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்ன மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இலங்ககைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் மற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதன் பலனாக இன்றைய தினம் முதலாவது தொகுதி பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தேவையான சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவிதமான நோய் தொற்றுக்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அழைத்து வரப்பட்டுள்ள குறித்த பயணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பயணிகள் அனைவரும் பியகம, கல்பந்த மந்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் நாட்டிற்கு திரும்புவதற்காக காத்திருக்கும் ஏனையவர்களையும் விரைவில் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய குறித்த பயண ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சரின் விசேட பிரதிநிதி திருமதி. சோபிதா ராஜசூரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment