Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தில்

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்கும் யோசனை நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், எதிராக 15 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

40 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டனர். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தச் செய்யாமை மற்றும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி, சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான அணிகளை அடக்குதல், இந்த சட்டத்தை பயன்படுத்தி, சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், தொழில்சார் நிபுணர்கள், எழுத்தாளர்களை பொலிஸில் தடுத்து வைப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான கடந்த காலங்களில் சர்வதேசத்தில் தொடர்ந்தும் பேசப்பட்டு வந்தது.

ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மீண்டும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்திருந்தது.

மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும் போர் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்துவதாகவும் அன்றைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.

வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டதன் பிரதிபலனாக இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் யூரோக்களாக அதிகரித்தது.

எனினும் தற்பொது ஏற்பட்டுள்ள நிலைமையில், ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைக்காமல் போனால், இலங்கையின் ஆடை உற்பத்தி தொழில் உட்பட பல தொழிற்துறைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment