இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! மட்டக்களப்பில் பதற்றம்.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் இன்று காலை காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடிய நிலையில் அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கமுற்பட்டபோது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இன்று காலை சர்வதேச மனித உரிமைகள் தினம் என்ற காரணத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் ஒன்றுகூடினர்.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் அங்கிருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு கோரிய நிலையில் அதற்கு அங்கிருந்தவர்கள் தம்மால் செல்லமுடியாது எனவும் தெரிவித்தனர்.

தற்போது கொரோனா தாக்கம் அதிகமாகவுள்ளதனால் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பொலிஸாரினால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதிலும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதன்போது அங்குவந்த புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார, வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் அனுமதிபெறப்படவேண்டும் எனவும் அவ்வாறு அனுமதிபெறப்படாமல் எந்த ஒன்றுகூடலும் நடாத்தமுடியாது எனவும் தெரிவித்தார்.

எனினும் கடந்த காலத்தில் மட்டக்களப்பில் அரசியல்வாதிகள் பல்வேறு நிகழ்வுகளையும் ஒன்றுகூடல்களையும் செய்யும்போது அங்கு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்காத நீங்கள் எங்களிடம் வந்து இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் கவலைக்குரியது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டாளர் இதன்போது வாதாடினார்.

கடந்த காலத்தில் செங்கலடி பகுதியில் நாங்கள் சுகாதார துறையிடம் அனுமதிபெற்று கவன ஈர்ப்பு போராட்டம் செய்தபோது தாங்கள் துரத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக மீண்டும் ஒரு தடவை அந்த தவறை தாங்கள் செய்ய விரும்பாத காரணத்தினாலேயே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதிபெறவில்லையெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன்,மக்கள் தங்களது போராட்டத்தினை முன்னெடுக்கமுடியும் எனவும் செல்வா சிலையருகே போராட்டத்தினை நடாத்துமாறு கூறிச்சென்றார்.

தமது உத்தரவினை மீறி நீங்கள் ஒன்றுகூடினால் உங்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவேன் என சுகாதார வைத்திய அதிகாரி மிரட்டியபோதிலும் நீங்கள் முடிந்ததை செய்யுங்கள் நாங்கள் இந்த போராட்டத்தினை நடாத்தியே தீருவோம் என்று கூறி அங்கிருந்து சென்று தந்தை செல்வா நினைவு பூங்கா அருகே போராட்டம் நடாத்தப்பட்டது.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment