இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! மட்டக்களப்பில் பதற்றம்.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் இன்று காலை காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடிய நிலையில் அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைக்கமுற்பட்டபோது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இன்று காலை சர்வதேச மனித உரிமைகள் தினம் என்ற காரணத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் ஒன்றுகூடினர்.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் அங்கிருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு கோரிய நிலையில் அதற்கு அங்கிருந்தவர்கள் தம்மால் செல்லமுடியாது எனவும் தெரிவித்தனர்.

தற்போது கொரோனா தாக்கம் அதிகமாகவுள்ளதனால் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பொலிஸாரினால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதிலும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதன்போது அங்குவந்த புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார, வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் அனுமதிபெறப்படவேண்டும் எனவும் அவ்வாறு அனுமதிபெறப்படாமல் எந்த ஒன்றுகூடலும் நடாத்தமுடியாது எனவும் தெரிவித்தார்.

எனினும் கடந்த காலத்தில் மட்டக்களப்பில் அரசியல்வாதிகள் பல்வேறு நிகழ்வுகளையும் ஒன்றுகூடல்களையும் செய்யும்போது அங்கு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்காத நீங்கள் எங்களிடம் வந்து இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் கவலைக்குரியது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டாளர் இதன்போது வாதாடினார்.

கடந்த காலத்தில் செங்கலடி பகுதியில் நாங்கள் சுகாதார துறையிடம் அனுமதிபெற்று கவன ஈர்ப்பு போராட்டம் செய்தபோது தாங்கள் துரத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக மீண்டும் ஒரு தடவை அந்த தவறை தாங்கள் செய்ய விரும்பாத காரணத்தினாலேயே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதிபெறவில்லையெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன்,மக்கள் தங்களது போராட்டத்தினை முன்னெடுக்கமுடியும் எனவும் செல்வா சிலையருகே போராட்டத்தினை நடாத்துமாறு கூறிச்சென்றார்.

தமது உத்தரவினை மீறி நீங்கள் ஒன்றுகூடினால் உங்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவேன் என சுகாதார வைத்திய அதிகாரி மிரட்டியபோதிலும் நீங்கள் முடிந்ததை செய்யுங்கள் நாங்கள் இந்த போராட்டத்தினை நடாத்தியே தீருவோம் என்று கூறி அங்கிருந்து சென்று தந்தை செல்வா நினைவு பூங்கா அருகே போராட்டம் நடாத்தப்பட்டது.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment