ஆன்மீகம் இந்து சமயம்

நாளை சிறப்புமிகு ஆனி உத்திரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் அற்புதமான திருமேனி நடராஜர் திருவுருவம். நடராஜ பெருமானின் திருவுருவில் பஞ்சபூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள், அனைத்து தெய்வ தத்துவங்களும் அடக்கம்.

இவரது உடல் வெம்மையானது. கழுத்தில் நீல கண்டம், கையில் அக்னிச்சுடர், உடலில் சுடுகாட்டு சாம்பல் பூசப்பட்டு உஷ்ணமான திருமேனியாக இருப்பதால், சிவபெருமானை குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அதாவது ஆடலரசரான நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படும்.

இறைவனை குளிர்விப்பதால் இயற்கையும் குளிர்கிறது என்பது ஐதீகம். இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

ஏன் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது?

வைகாசி மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் ஆனி மாதத்தில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், நடராஜ பெருமானை வெப்ப தாக்கத்திலிருந்து குளிர்விப்பதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களை கொண்டு ஆனி மாதத்தில் திருமஞ்சனம் செய்கின்றனர்.

ஆனி உத்திரம் :

உலகெங்கிலும் வாழும் பெருமக்களுக்கெல்லாம் பரம்பொருளாக இருந்து இந்த உலகையும், மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

ஆனி மாதம் என்றாலே ஆனி உத்திர விரதம் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனி உத்திரம் தரிசனத்தன்று அம்பலத்தாடும் நடராஜருக்கு அதிகாலை நேரத்தில் ஆனந்த திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் சர்வ லோக நாயகராக சித்சபைக்கு நடராஜர் ஆனந்த தாண்டவமாடியபடி தரிசனம் தரும் நாள் ஆனி உத்திரம் ஆகும்.

பலன்கள் :

🌻 ஆனி திருமஞ்சன நாளில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை பெண்கள் தரிசித்தால் சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள்.

🌻 கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

🌻 ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும்.

🌻 கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

Recent posts

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை): (1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி...
Thamil Paarvai

சிலுவையில்இயேசுகூறியஏழுஉபதேசங்கள்

முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை...
Thamil Paarvai

புனித வெள்ளி என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படும் ஒரு புனித நாளாக இந்த புனித வெள்ளி எனும் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. இது பொதுவாக கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இயேசுபிரான் உயிர்...
Thamil Paarvai

இயேசு ராஜாவாக வருகிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம்...
Thamil Paarvai

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்..

🦚 முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம். தை மாதத்தில் பௌர்ணமியன்று பூசம்...
Thamil Paarvai

தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்”

தைப்பூசத்தின் சிறப்புகள் பூச நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்நாளில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கினார்....
Thamil Paarvai

கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

1. கோயிலில் தூங்கக் கூடாது.2. தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.3. கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக்...
Thamil Paarvai

Leave a Comment