சிறுகதை மொழி இலக்கியம்

மனித ஊனம்

ராமு தன் மனைவி செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கிறான் இது மூன்றாவது பிரசவம்.ஏற்கனவே இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். பெரிய மகள் புவனாவிற்கு பத்து வயதாகிறது.சிறிய மகள் சந்தியாவிற்கு ஐந்து வயதாகிறது. மூன்றாவதாக மகன் பிறக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான் ராமு. மருத்துவமனை வெளியே காத்திருந்த ராமை அழைத்து உங்களுககு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று செவிலியர் கூறுகிறார்.ராமு வருத்தமாக மனைவியை பார்க்க உள்ளே செல்கிறான் .செல்வியின் கண்கள் கலங்கியிருந்தன.ராமு தன் மனைவியிடம் வருத்தத்தை வெளிப்படுத்தாமல் சிரித்துக்கொண்டே குழந்தையைப் பார்க்கிறான். மிகவும் அழகாக இருந்தாள் பெண் குழந்தை.மூன்று நாள் கழிதது வீட்டிற்கு அழைத்துப்போனான்.தன் தங்கையைப் பார்த்து புவனா,சந்தியா இருவரும் மகிழ்ந்தனர்.செல்வியின் தாய் ஊரிலிருந்து வந்து மகளையும்,பேத்தியையும் கவனித்துக்கொண்டாள்.ராமு பணிக்குச் சென்றான். பதினோராம் நாள் பெயர்ச் சூட்டுவிழா நடத்தி அருந்ததி என்று பெயர் வைத்தார்கள்.ராமுவிற்கு எதிர்காலம் நினைத்து வருந்தினான் மகள்களை எப்படி வளர்த்து ஆளாக்குவது வேலையும் நிரந்தரமில்லை என்று கலங்கினான். அவனது மனைவி செல்வி அவனிடம் எப்படியாவது தன் மகள்களை நன்றாக படிக்கவைக்க வேண்டுமென கூறுகிறாள். நாட்கள் செல்கிறது.ஒரு நாள் அருந்ததிக்கு காய்ச்சல் வருகிறது.மருத்துவரிடம் செல்கிறாள் செல்வி அருந்ததியைப் பரிசோதித்த மருத்துவர் தடுப்பூசியெல்லாம் போட்டீர்களா என்று கேட்டார்.செல்வி தடுப்பூசி அட்டவணை அட்டையைப் எடுத்து பார்க்கிறாள் போலியோ ஊசி போடவில்லை என்று கூறினாள். போலியோ பற்றி விழிப்புணர்வு இல்லாத காலம் அது.மருத்துவர் இரத்தப்பரிசோதனை செய்ய வேண்டுமென கூறுகிறார்.இரத்த மாதிரியை பரிசோதித்த மருத்துவர் அருந்ததிக்கு போலியோ அட்டாக் ஆகியிருப்பதை பெற்றோரிடம் தெரிவிக்கிறார்.செல்வியும் ,ராமுவும் கதறி அழுகின்றனர். தம்முடைய அஜாக்கிரதையால் தன் குழந்தையின் இரு கால்களும் செயலிழந்து விட்டதே என்று வருந்தினர். ராமுவின் நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் கூறினர்.நம்பிக்கை இழக்கமால் மகள்களை நன்றாக படிக்கவைத்தான்.அருந்ததி நன்றாக படித்தாள்.அவள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தாள்.ராமு அவளுக்கு ஊக்கப்படுத்தி படிக்க வைத்தான்.புவனாவும்,சந்தியாவும் பட்டப்படிப்பு முடித்து வங்கி வேலைக்குச் சென்றனர்.மூன்று வருடம் கழித்து புவனாவிற்கு திருமணம் நடத்தினான் ராமு. சந்தியாவின் வருமானத்தில் அருந்தியைப் பட்டப் படிப்பு படிக்கவைத்தான். சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.அருந்ததியின் தோழிகள் அனைவரும் சேர்ந்து அவளுக்கு மோட்டார் வண்டி வாங்கிக் கொடுத்தனர். அந்த வண்டியில் கல்லூரிச் செல்வாள் . இறுதி தேர்வில் கல்லூரியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சியானாள். கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பிரபல கம்பெனியில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டாள். ராமுவும்,செல்வியும் மிகவும் மகிழ்ந்தனர். ஆறுமாதம் கழித்து சந்தியாவுக்கு திருமணம் முடிந்தது.அருந்ததிக்கு வருமானம் கூடியது.ராமுவுக்கு வயதானதால் சரியாக பணிக்கு செல்ல முடியவில்லை.அருந்ததியின் வருமானத்தில் குடும்பத்தை நடத்தினாள் செல்வி.அருந்ததியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு கால் சற்று ஊனமுற்ற சுரேஷ் அவளை விரும்புவதாக கூறினான்.அவளுக்கு தயக்கமாக இருந்தது.இரு கால்களும் செயலிழந்த என்னை உங்கள் வீட்டில் ஏற்பார்களா எனக் கேட்டாள். நான் என் பெற்றோரிடம் எப்படியாவது சம்மதம் வாங்குகிறேன் என்றான்.அருந்ததி தன் பெற்றோரிடம் சுரேஷ் தன்னை விரும்புவதைக் கூறினாள்.ராமுவும்,செல்வியும் அச்சமுற்றனர். பிறகு ஒருநாள் சுரேஷ் தன் பெற்றோருடன் வந்தான்.அருந்தியின் கால் ஊனத்தைப் பார்த்தவுடன் சுரேஷின் தந்தை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மனமில்லை. சுரேஷின் தாய் தன் மகனுக்கும் உள்ள ஒரு கால் ஊனத்தை எடுத்துரைத்தாள். அவரும் ஒப்புக்கொண்டார்.தாம்பூலம் மாற்றிக்கொண்டனர். ஆறு மாதம் கழித்து திருமணம் வைத்துக்கொள்ளலாம் எனப் பேசி முடிவெடுத்தனர்.இரண்டு மாதம் கழிந்தது.அருந்ததி மோட்டார் வண்டியில் அலுவலகம் செல்லும் போது எதிரே வந்த பேருந்து மோதி விபத்து நடக்கிறது. அருந்ததியின் கால்களில் அடிப்பட்டு இரத்தம் வருகிறது.அங்கிருந்தவர்கள் அவளை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனர்.பெற்றோருக்கு தகவல் வந்ததும் அலறி அடித்து ஓடினர்.மருத்துவர் உடனே அறுவைச்சிகிச்சை செய்யவேண்டுமெனக் கூறுகிறார்.ராமுவால் தாங்கமுடியவில்லை.சுரேஷ் அருந்ததிக்கு நடந்த விபத்தால் நொறுங்கிப்போனான். தன் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.அறுவைச்சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாள் அருந்ததி. செல்வி அவளைப் பார்த்து அழுதவண்ணம் இருந்தாள்.சுரேஷ் ஆறுதல் கூறினான் .திடிரென்று ஒருநாள் சுரேஷின் பெற்றோர் அருந்ததி வீட்டிற்கு வருகிறார்கள் அவள் கால்களில் உள்ள கட்டைப் பாராத்தும் அதிர்ச்சியாக என்ன நடந்தது என்கிறார்கள்.செல்வி அழுதுக்கொண்டே நடந்ததைக் கூறுகிறாள்.சுரேஷின் பெற்றோர்கள் தங்களிடம் ஏன் மறைத்தீர்கள் எனக் கேட்டுவிட்டு கோபத்துடன் சென்று விட்டனர். சுரேஷ் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் கேட்பதாக இல்லை. திருமணத்தை நிறுத்த வேண்டுமெனக் கூறுகிறார்.மகன் கேட்பதாக இல்லை. மனமுடைந்த தந்தை விஷமருந்ததுகிறார் காப்பாற்ற முடியவில்லை. சுரேஷின் தாய் கதறுகிறார்.சுரேஷும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறான். நான் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டுமெனவும் இல்லாவிடில் நானும் இறந்துவிடுவேன் என்கிறாள். சரி என்று ஒப்புக்கொள்கிறான் சுரேஷ்.தாய் பார்த்த பெண்ணையே மணமுடிக்கிறான். இதைப் பற்றி தெரியாத அருந்ததி சுரேஷை தொலைப்பேசியில் அழைக்கிறாள் அவன் தொலைப்பேசி எண் செயலிழந்ததாக தெரிகிறது.நண்பர்களை விசாரித்துப போது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது தெரிகிறது. அவளும் ,பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.அழுது அழுது ஓய்ந்தார்கள் புவனாவும்,சந்தியாவும் உடன் இருந்து ஆறுதல் கூறினர்.மனதைத் தேற்றிக்கொண்டாள் அருந்ததி இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு அலுவலகம் சென்றாள்.வழக்கம் போல தன் பணியாற்றி தன் பெற்றோர்கள்க் கவனித்துக் கொள்கிறாள் அருந்ததி.

Recent posts

பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியின் மேற்பரப்பில் நாம் காணும் கடல்கள், ஆறுகள், ஏரிகள் அனைத்தும் சேர்ந்ததை விட பல மடங்கு அதிகமான நீர் நம் காலடிக்கு அடியில், சுமார் 400 முதல் 660 கிலோமீட்டர்...
Thamil Paarvai

உலகின் கையிருப்பு நாணயம் மாறுகிறதா? டாலர் ஆட்சிக்கு ஆபத்தா?

ஆம், உலகின் நாணய முறைமையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க டாலரின் நிலை சவால்களை எதிர்கொண்டாலும், அதன் ஆதிக்கம் உடனடியாக முடிவுக்கு வரும் நிலை...
Thamil Paarvai

உலகின் முக்கிய நீரிணைகளின் வரலாறு

நீரிணைகள் வெறும் நீர்ப் பரப்புகள் மட்டுமல்ல; அவை உலக வர்த்தகத்தின் நாடிகள், பேரரசுகளின் போர்க்களங்கள், மற்றும் நாகரிகங்களின் சந்திப்பிடங்களாக விளங்குகின்றன. உலகின் மிக முக்கியமான மூன்று நீரிணைகளின்...
Thamil Paarvai

இன்றைய உலக நாணயங்கள்: பாரம்பரிய நாணயங்கள் மற்றும் டிஜிட்டல் நாணயங்கள்

உலக நாணய உலகம் இன்று இரு முக்கிய முகங்களைக் கொண்டுள்ளது: ஒருபுறம் நாடுகளின் பாரம்பரிய நாணயங்கள், மறுபுறம் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயங்கள். 2026-ம் ஆண்டின்...
Thamil Paarvai

பன்முக நாணய முறைமை (Multipolar Currency System) – ஒரு விரிவான பார்வை

பன்முக நாணய முறைமை என்பது உலகப் பொருளாதாரத்தில் ஒரு சக்திவாய்ந்த நாணயம் (தற்போதைய அமெரிக்க டாலர்) மட்டும் ஆதிக்கம் செலுத்தாமல், பல முக்கிய நாணயங்கள் சமமாகவோ அல்லது போட்டியிட்டோ...
Thamil Paarvai

பிரிக்ஸ் நாணயம்: உண்மையில் என்ன நடக்கிறது?

பிரிக்ஸ் (BRICS) நாடுகள் ஒரு புதிய பொதுவான நாணயத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், 2026-ம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி, “பிரிக்ஸ் நாணயம்” என்ற...
Thamil Paarvai

சீன நாணயத்தின் வரலாறு: கடற்சிப்பிகளில் இருந்து டிஜிட்டல் யுவான் வரை

சீன நாணயத்தின் வரலாறு உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான நாணய வரலாறுகளில் ஒன்றாகும். கடற்சிப்பிகள் (sea shells) பயன்பாட்டில் இருந்த காலம் முதல், இன்றைய டிஜிட்டல் யுவான்...
Thamil Paarvai

ரஷ்ய நாணயத்தின் வரலாறு: ரூபிளின் பயணம்

ரஷ்ய நாணயமான ரூபிள் (Ruble) உலகின் மிகப் பழமையான நாணயங்களில் ஒன்றாகும். இது பிரிட்டிஷ் பவுண்டிற்கு அடுத்தபடியாக இன்றும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான நாணயமாகக் கருதப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில்...
Thamil Paarvai

டிஜிட்டல் நாணயங்கள்: ஒரு முழுமையான அறிமுகம்

டிஜிட்டல் நாணயங்கள் இன்று உலக நிதி அமைப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. 2026-ம் ஆண்டு நிலவரப்படி, டிஜிட்டல் நாணய உலகம் மூன்று முக்கிய வகைகளாகப்...
Thamil Paarvai

Leave a Comment